அத்தியாயம்: 43, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4218

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، – وَهُوَ ابْنُ أَنَسٍ – عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ أَنَّ أَبَا الطُّفَيْلِ، عَامِرَ بْنَ وَاثِلَةَ أَخْبَرَهُ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ أَخْبَرَهُ قَالَ :‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يَجْمَعُ الصَّلاَةَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا حَتَّى إِذَا كَانَ يَوْمًا أَخَّرَ الصَّلاَةَ ثُمَّ خَرَجَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ثُمَّ دَخَلَ ثُمَّ خَرَجَ بَعْدَ ذَلِكَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا ثُمَّ قَالَ ‏”‏ إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يُضْحِيَ النَّهَارُ فَمَنْ جَاءَهَا مِنْكُمْ فَلاَ يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا حَتَّى آتِيَ ‏”‏ ‏.‏ فَجِئْنَاهَا وَقَدْ سَبَقَنَا إِلَيْهَا رَجُلاَنِ وَالْعَيْنُ مِثْلُ الشِّرَاكِ تَبِضُّ بِشَىْءٍ مِنْ مَاءٍ – قَالَ – فَسَأَلَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَلْ مَسَسْتُمَا مِنْ مَائِهَا شَيْئًا ‏”‏ ‏.‏ قَالاَ نَعَمْ ‏.‏ فَسَبَّهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ – قَالَ – ثُمَّ غَرَفُوا بِأَيْدِيهِمْ مِنَ الْعَيْنِ قَلِيلاً قَلِيلاً حَتَّى اجْتَمَعَ فِي شَىْءٍ – قَالَ – وَغَسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيهِ يَدَيْهِ وَوَجْهَهُ ثُمَّ أَعَادَهُ فِيهَا فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ مُنْهَمِرٍ أَوْ قَالَ غَزِيرٍ – شَكَّ أَبُو عَلِيٍّ أَيُّهُمَا قَالَ – حَتَّى اسْتَقَى النَّاسُ ثُمَّ قَالَ ‏”‏ يُوشِكُ يَا مُعَاذُ إِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ أَنْ تَرَى مَا هَا هُنَا قَدْ مُلِئَ جِنَانًا ‏”‏ ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘தபூக்’ போருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அவர்கள் (இரு நேரத்) தொழுகைகளை (ஒரே நேரத்தில்) சேர்த்துத் தொழுதுவந்தார்கள்; லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.

பின்பொரு நாள் தொழுகையைத் தாமதப்படுத்திவிட்டு, பிறகு வெளிவந்து, லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுத பிறகு சென்றுவிட்டு, பிறகு வந்து மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.

பிறகு, “அல்லாஹ் நாடினால், நாளை நீங்கள் தபூக் நீரூற்றுக்குச் செல்வீர்கள். முற்பகலுக்குமுன் நீங்கள் அங்கு சென்றுவிடாதீர்கள். நான் வருவதற்குமுன் உங்களில் எவரும் அங்குச் சென்றுவிட்டால், அங்குள்ள நீரில் கை வைத்துவிட வேண்டாம்” என்று கூறினார்கள்.

அவ்வாறே நாங்கள் அங்குச் சென்றோம். அப்போது இருவர் எங்களை முந்திக்கொண்டு அந்த ஊற்றை நோக்கிச் சென்றனர். செருப்பு வார் அளவுக்கு அந்த ஊற்றில் நீர் சிறிதளவே சுரந்துகொண்டிருந்தது. பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்துசேர்ந்தார்கள்.) இருவரிடமும் “அதன் நீரில் கை வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் “ஆம்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்விருவரையும் கண்டித்தார்கள். அவ்விருவரிடமும் சொல்ல வேண்டுமென அல்லாஹ் நாடியதையெல்லாம் சொன்னார்கள்.

பிறகு மக்கள் தம் கைகளால் அந்த ஊற்றிலிருந்து சிறிது சிறிதாக நீர் அள்ளி ஓரிடத்தில் சேர்த்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தத் நீரில் தமது கையையும் முகத்தையும் கழுவி அந்த ஊற்றிலேயே அந்த நீரை விட்டார்கள். அப்போது ஊற்றிலிருந்து ஏராளமான நீர் பீறிட்டு (அ) நிறைந்து ஓடியது. மக்கள்  அனைவரும் நீர் அருந்தினர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முஆதே! (எனக்குப் பிறகு) நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால், இவ்விடத்தில் தோட்டங்கள், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்” என்று (முன்னறிவிப்பாகக்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் ஜபல் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஅலீ (ரஹ்), “ஊற்றிலிருந்து ஏராளமான நீர் பீறிட்டு (அ) நிறைந்து ஓடியது என்று ஐயத்துடன் அறிவிக்கின்றார்.

Share this Hadith:

Leave a Comment