அத்தியாயம்: 44, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4401

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ عُثْمَانَ بْنِ غِيَاثٍ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ :‏

قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَائِطٍ مِنْ حَائِطِ الْمَدِينَةِ وَهُوَ مُتَّكِئٌ يَرْكُزُ بِعُودٍ مَعَهُ بَيْنَ الْمَاءِ وَالطِّينِ إِذَا اسْتَفْتَحَ رَجُلٌ فَقَالَ ‏”‏ افْتَحْ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ ‏”‏ ‏.‏ قَالَ فَإِذَا أَبُو بَكْرٍ فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ – قَالَ – ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ فَقَالَ ‏”‏ افْتَحْ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ ‏”‏ ‏.‏ قَالَ فَذَهَبْتُ فَإِذَا هُوَ عُمَرُ فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ – قَالَ – فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ افْتَحْ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى تَكُونُ ‏”‏ ‏.‏ قَالَ فَذَهَبْتُ فَإِذَا هُوَ عُثْمَانُ بْنُ عَفَّانَ – قَالَ – فَفَتَحْتُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ – قَالَ – وَقُلْتُ الَّذِي قَالَ فَقَالَ اللَّهُمَّ صَبْرًا أَوِ اللَّهُ الْمُسْتَعَانُ ‏


حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ حَائِطًا وَأَمَرَنِي أَنْ أَحْفَظَ الْبَابَ ‏.‏ بِمَعْنَى حَدِيثِ عُثْمَانَ بْنِ غِيَاثٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவின் ஒரு தோட்டத்தில், தம்மிடமிருந்த குச்சியை நீரிலும் களிமண்ணிலும் ஊன்றியபடி சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வந்து தோட்டத்தின் வாயிற்கதவைத்) திறக்கும்படிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்காகக் கதவைத் திறப்பீராக!; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்வீராக!” என்று சொன்னார்கள். (நான் வாயிற்கதவைத் திறந்தேன்.) அங்கு அபூபக்ரு (ரலி) நின்றார்கள். அவர்களுக்கு வாயிற்கதவைத் திறந்துவிட்டு, அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன்.

பிறகு மற்றொருவர் (வந்து வாயிற்கதவைத்) திறக்கும்படிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அவருக்குக்) கதவைத் திறப்பீராக!; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி கூறுவீராக!” என்று சொன்னார்கள். நான் சென்று பார்த்தபோது, அங்கு உமர் (ரலி) இருந்தார்கள். அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு, அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன்.

பிறகு இன்னொருவர் (வந்து கதவைத்) திறக்கும்படி கேட்டார். அப்போது (சாய்ந்து கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (எழுந்து நேராக) அமர்ந்து, “அவருக்கு வாயிற்கதவைத் திறப்பீராக!; (அவருக்கு) நேரவிருக்கும் துன்பத்தையடுத்து, அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறுவீராக!” என்று சொன்னார்கள். நான் சென்று (பார்த்தபோது) அங்கு உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி) இருந்தார்கள்.

நான் கதவைத் திறந்துவிட்டு, அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவருக்குத் துன்பம் நேர விருப்பதாக, அதையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாகக்) கூறியதையும் சொன்னேன்.

அப்போது உஸ்மான் (ரலி), “இறைவா! எனக்குப் பொறுமையை வழங்குவாயாக!” அல்லது “(எனக்கு நேரவிருக்கும் அத்துன்பத்தின்போது) அல்லாஹ்வே உதவி புரிபவன் ஆவான்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டு, அதன் வாசலில் காவலுக்கு நிற்கும்படி என்னைப் பணித்தார்கள் …” என்று ஆரம்பமாகிறது.

Share this Hadith:

Leave a Comment