அத்தியாயம்: 44, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4408

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، – يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ – عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ قَالَ :‏

كَانَ عَلِيٌّ قَدْ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَيْبَرَ وَكَانَ رَمِدًا فَقَالَ أَنَا أَتَخَلَّفُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَخَرَجَ عَلِيٌّ فَلَحِقَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا كَانَ مَسَاءُ اللَّيْلَةِ الَّتِي فَتَحَهَا اللَّهُ فِي صَبَاحِهَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لأُعْطِيَنَّ الرَّايَةَ – أَوْ لَيَأْخُذَنَّ بِالرَّايَةِ – غَدًا رَجُلٌ يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ أَوْ قَالَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ يَفْتَحُ اللَّهُ عَلَيْهِ ‏”‏ ‏.‏ فَإِذَا نَحْنُ بِعَلِيٍّ وَمَا نَرْجُوهُ فَقَالُوا هَذَا عَلِيٌّ ‏.‏ فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّايَةَ فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ

கைபர் போரின்போது அலீ (ரலி) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்ததால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள், “நான் அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே!” என்று (வருத்தத்துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.

கைபரை அல்லாஹ் வெற்றிகொள்ளச்செய்த காலைப் பொழுதிற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாளை (முஸ்லிம்களின்) கொடியை ஒருவரிடம் தரப்போகிறேன் / ஒருவர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார். அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றார்கள் / அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கின்றார். அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்!” என்று கூறினார்கள்.

நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) (வந்து) எங்களுடன் (சேர்ந்து) இருந்தார்கள். அப்போது மக்கள், “இதோ அலீ (வந்துவிட்டார்)” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தக் கொடியை அலீ (ரலி) அவர்களிடமே கொடுத்தார்கள். அவர்களுக்கே அல்லாஹ் வெற்றியளித்தான்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

Share this Hadith:

Leave a Comment