அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4688

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ سَالِمٍ مَوْلَى النَّصْرِيِّينَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنَّمَا مُحَمَّدٌ بَشَرٌ يَغْضَبُ كَمَا يَغْضَبُ الْبَشَرُ وَإِنِّي قَدِ اتَّخَذْتُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيهِ فَأَيُّمَا مُؤْمِنٍ آذَيْتُهُ أَوْ سَبَبْتُهُ أَوْ جَلَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ كَفَّارَةً وَقُرْبَةً تُقَرِّبُهُ بِهَا إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! முஹம்மது ஒரு மனிதரே! மனிதர்கள் கோபப்படுவதைப் போன்றே அவரும் கோபப்படுவார். நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுத்துள்ளேன், அதற்கு நீ மாறு செய்யமாட்டாய்: நான் இறை நம்பிக்கையாளர் யாரையாவது மன வேதனைப்படுத்தியிருந்தால், அல்லது ஏசியிருந்தால், அல்லது அடித்திருந்தால் அதையே அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும் செயலாகவும் மாற்றிடுவாயாக!” என்று இறைஞ்சியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: