அத்தியாயம்: 48, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4843

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَزْهَرَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ :‏

كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم الصَّلاَةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ ‏ “‏ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي ‏”‏ ‏

ஒருவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவினால், அவருக்கு நபி (ஸல்) தொழுகையைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு “அல்லஹும்மஃக்பிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வ ஆஃபினீ, வர்ஸுக்னீ” (பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக்  கருணை புரிவாயாக! என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!) எனும் சொற்களைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி கட்டளையிடுவார்கள்.

அறிவிப்பாளர் : தாரிக் பின் அஷ்யம் (ரலி)