அத்தியாயம்: 5, பாடம்: 01, ஹதீஸ் எண்: 812

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ أُعْطِيتُ ‏ ‏جَوَامِعَ الْكَلِمِ ‏ ‏وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ ‏ ‏لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ ‏ ‏لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ ‏ ‏بِيَ النَّبِيُّونَ ‏

“நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் அறுவகையில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:

செறிவான சொற்கள் வழங்கப் பெற்றுள்ளேன்.

(எதிரிகளிடம் ஏற்படும்) அச்சத்தால் உதவியளிக்கப் பட்டுள்ளேன்.

எனக்குப் போர்ச் செல்வங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்தாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பப் பட்டுள்ளேன்.

என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப் பெற்றுவிட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

“செறிவான சொற்கள் என்பன இறைமறை வசனங்களைக் குறிக்கும்” என்றும் “அல்லாஹ், தன் தூதருக்கு வழங்கிய, சுருங்கக்கூறி நிரம்ப விளங்க வைக்கும் நாவன்மை” என்றும் இருகருத்துகள் உள்ளன.

Share this Hadith:

Leave a Comment