அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 898

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُهَلَّبِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى الْعَصْرَ فَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ ثُمَّ دَخَلَ مَنْزِلَهُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ ‏ ‏الْخِرْبَاقُ ‏ ‏وَكَانَ فِي يَدَيْهِ طُولٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَذَكَرَ لَهُ صَنِيعَهُ وَخَرَجَ غَضْبَانَ يَجُرُّ رِدَاءَهُ حَتَّى انْتَهَى إِلَى النَّاسِ فَقَالَ أَصَدَقَ هَذَا قَالُوا نَعَمْ ‏ ‏فَصَلَّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓர்) அஸ்ருத் தொழுகையில் மூன்றாவது ரக்அத் முடிந்ததும் ஸலாம் கொடுத்துவிட்டு(ப் பள்ளியை ஒட்டியிருந்த) தமது இல்லத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். உடனே கிர்பாக் எனும் பெயருடைய, கைகள் நீளமான ஒருவர் (துல்யதைன்) எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! …” என்றழைத்து அவர்கள் செய்ததை நினைவூட்டினார். அப்போது கோபத்தோடு தமது மேல்துண்டை தரையில் இழுத்தபடி வெளியேறி வந்து சேர்ந்தார்கள். பிறகு “இவர் சொல்வது உண்மைதானா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். உடனே அவர்கள் இன்னொரு ரக்அத் தொழுவித்து ஸலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்காக) இரு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பிறகு (மீண்டும்) ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி)

Share this Hadith:

Leave a Comment