حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَيَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَابْنُ حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرُونَ حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ عَنْ ابْنِ قُسَيْطٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّهُ أَخْبَرَهُ :
أَنَّهُ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ عَنْ الْقِرَاءَةِ مَعَ الْإِمَامِ فَقَالَ لَا قِرَاءَةَ مَعَ الْإِمَامِ فِي شَيْءٍ وَزَعَمَ أَنَّهُ قَرَأَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ إِذَا هَوَى فَلَمْ يَسْجُدْ
நான் ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் கிராஅத் ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “இமாமைப் பின்பற்றித் தொழுபவருக்கு ஓதுதல் (கிராஅத்) ஏதும் கிடையாது” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் கூறும்போது, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘வந்நஜ்மி இதா ஹவா’ (எனத் தொடங்கும் 53ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அதற்காக அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸைத் பின் தாபித் (ரலி) வழியாக அதாஉ பின் யஸார் (ரஹ்)