அத்தியாயம்: 5, பாடம்: 22, ஹதீஸ் எண்: 913

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏رَآنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ نَهَانِي ‏

فَقَالَ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ فَقُلْتُ وَكَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ قَالَ ‏ ‏كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا وَأَشَارَ بِإِصْبَعِهِ الَّتِي تَلِي ‏ ‏الْإِبْهَامَ وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى ‏

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّيْتُ إِلَى جَنْبِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَزَادَ ‏ ‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏فَكَانَ ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا بِهِ عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏ثُمَّ حَدَّثَنِيهِ ‏ ‏مُسْلِمٌ

நான் (சிறிய வயதில்) தொழுகையில் பொடிக்கற்களை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் (அவ்வாறு செய்யலாகாது என) என்னைத் தடுத்தார்கள். “(தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் போன்று நீயும் செய்” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த விதமென்ன?” எனக் கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகை (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால் தம்முடைய வலது முன்கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக்கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக் கொண்டு பெருவிரலை ஒட்டியுள்ள (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள். இடது முன்கையை இடது தொடையில் வைத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் வழியாக அலீ பின் அப்திர்ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்)

குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் தொழுது கொண்டிருந்தேன் …” என்று அலீ பின் அப்திர்ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment