அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 934

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ ‏ ‏وَعَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ ‏ ‏سَمِعَا ‏ ‏وَرَّادًا ‏ ‏كَاتِبَ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏يَقُولُا ‏
‏كَتَبَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏إِلَى ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَكَتَبَ إِلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ إِذَا قَضَى الصَّلَاةَ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ

முஆவியா (ரலி), முஃகீரா (ரலி) அவர்களுக்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என்று எழுதிக் கேட்டிருந்தார். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ‘லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த; வலா முஃத்திய லிமா மனஃத்த; வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் (வணங்குதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா, நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர். செல்வந்தரின் செல்வம் எதுவும் உன்னிடமிருந்து காத்துக் கொள்ள அவருக்குப் பயனளிக்காது)’ என்று கூறுவதை நான் செவியேற்றிருக்கிறேன்” என்று முஃகீரா (ரலி) மறுமொழி எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அவர்களின் (முன்னாள்) அடிமை வர்ராது (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment