حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ :
صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ ” وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ “
فَنَزَلَتْ بَعْدَمَا صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَمَرَّ بِنَاسٍ مِنْ الْأَنْصَارِ وَهُمْ يُصَلُّونَ فَحَدَّثَهُمْ فَوَلَّوْا وُجُوهَهُمْ قِبَلَ الْبَيْتِ
“நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது) உங்கள் முகங்களை அந்த(க் கஅபா)ப் பக்கமே திருப்பிக்கொள்ளுங்கள்” எனும் அல்பகரா அத்தியாயத்திலுள்ள (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை, நபி (ஸல்) அவர்களுடன் நான் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதிருக்கின்றேன். நபி (ஸல்) (ஒரு) தொழுகையை முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப்பெற்றது. (எங்களுடன் தொழுத) மக்களில் ஒருவர், (பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அன்ஸாரிகளில் சிலரைக் கடந்து சென்று (தொழும் திசை மாற்றப்பட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக் கொண்டனர்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)