அத்தியாயம்: 5, பாடம்: 04, ஹதீஸ் எண்: 822

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

‏أَنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ ‏ ‏وَأُمَّ سَلَمَةَ ‏ ‏ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا ‏ ‏بِالْحَبَشَةِ ‏ ‏فِيهَا تَصَاوِيرُ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أُولَئِكِ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكِ الصُّوَرَ أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ‏

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهُمْ تَذَاكَرُوا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي مَرَضِهِ فَذَكَرَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏وَأُمُّ حَبِيبَةَ ‏ ‏كَنِيسَةً ثُمَّ ‏ ‏ذَكَرَ نَحْوَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏ذَكَرْنَ أَزْوَاجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ ‏ ‏الْحَبَشَةِ ‏ ‏يُقَالُ لَهَا ‏ ‏مَارِيَةُ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمْ ‏

அன்னையர் உம்முஹைபீபா (ரலி), உம்முஸலமா (ரலி) ஆகிய இருவரும் (முதலாவது புலப்பெயர்வின்போது) அபிஸீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தங்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிட்டால், அவருடைய சமாதியின்மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி, அதில் உருவங்களையும் வரைந்து விடுவர். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகத் தீயவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) தம் தந்தை வழியாக அறிவிப்பதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்று (தம் இறுதிநாட்களில்) இருந்தபோது அவர்களிடம் மக்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உம்முஸலமா (ரலி) அவர்களும் உம்முஹபீபா (ரலி) அவர்களும் (தாங்கள் கண்ட) கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) தொடங்கியதாக இடம்பெற்றுள்ளது.

அபூ குரைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபித்துணைவியர் (இருவர்) அபிஸீனியாவில் தாங்கள் கண்ட ‘மாரியா’ என்று பெயர் வழங்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டனர் …” என்று அன்னை ஆயிஷா (ரலி) தொடங்கியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment