حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ ح و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ :
قَالَ لِي رَسُولُ اللَّهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ
وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “தொழுகையை அதன் உரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்கள். “நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகின்றீர்கள்?” என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள். பிறகு அவர்களுடன் (அதே தொழுகையை இணைந்து) நீ தொழ நேர்ந்தால் தொழுது கொள். அது உனக்குக் கூடுதல்(நஃபில்) தொழுகையாக அமைந்துவிடும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)
குறிப்பு :
கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “… அதன் உரிய நேரத்தைவிட்டு …” என்பது இடம்பெறவில்லை.