அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1033

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ وَهُوَ ابْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏مَطَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏

نُصَلِّي يَوْمَ الْجُمُعَةِ خَلْفَ أُمَرَاءَ فَيُؤَخِّرُونَ الصَّلَاةَ قَالَ فَضَرَبَ فَخِذِي ضَرْبَةً أَوْجَعَتْنِي ‏ ‏وَقَالَ سَأَلْتُ ‏ ‏أَبَا ذَرٍّ ‏ ‏عَنْ ذَلِكَ فَضَرَبَ فَخِذِي وَقَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏صَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا وَاجْعَلُوا صَلَاتَكُمْ مَعَهُمْ نَافِلَةً ‏

قَالَ ‏ ‏و قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏ذُكِرَ لِي ‏ ‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَرَبَ فَخِذَ ‏ ‏أَبِي ذَرٍّ

நான் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்களிடம், “நாங்கள் வெள்ளிக்கிழமைகளில் சில ஆட்சித் தலைவர்களைப் பின்பற்றித் தொழுகிறோம்; அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தித் தொழுகின்றனர்” என்று கூறினேன். அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் எனது தொடையில் வலிக்கும் அளவிற்கு ஓர் அடி அடித்தார்கள். பிறகு, “நான் இது தொடர்பாக அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் என் தொடையில் அடித்துவிட்டு, ‘ நான் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் – தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள்! பின்னர் மக்களுடன் நீங்கள் தொழும் தொழுகையைக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக ஆக்கிக்கொள்ளுங்கள் – என்று சொன்னார்கள்’ என அபூதர் (ரலி) கூறினார்கள்” என்பதாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) கூறினார்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) வழியாக அபுல் ஆலியா அல்பர்ராஉ (ரஹ்)

குறிப்பு :

நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்களின் சகோதரர் மகனான அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அபூதர் (ரலி) அவர்களின் தொடையில் அடித்தார்கள் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் சொற்கள் மட்டுமின்றி அவர்களின் சிற்சில செயல்முறைகளும் அறிவிப்பாளர்களால் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன.

Share this Hadith:

Leave a Comment