حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا دَامَتْ الصَّلَاةُ تَحْبِسُهُ لَا يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ
“உங்களில் ஒருவர், தம் இல்லத்தாரிடம் திரும்பிச் செல்லவிடாமல் தம்மைத் தடுக்கவல்ல(தாகக் கருதும்) தொழுகையை எதிர்பார்த்துக் கட்டுப்பாட்டுடன் காத்திருக்குங் காலமெல்லாம் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)