அத்தியாயம்: 5, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1061

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَزَالُ الْعَبْدُ فِي صَلَاةٍ مَا كَانَ فِي مُصَلَّاهُ يَنْتَظِرُ الصَّلَاةَ وَتَقُولُ الْمَلَائِكَةُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ حَتَّى يَنْصَرِفَ أَوْ يُحْدِثَ قُلْتُ مَا يُحْدِثُ قَالَ ‏ ‏يَفْسُو أَوْ يَضْرِطُ

“ஓர் அடியார், தொழுகையை எதிர்பார்த்துத் தொழுமிடத்தில் அமர்ந்திருக்குவரை தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறார். அவர் அங்கிருந்து அகலும்வரை அல்லது அவருக்கு ‘ஹதஸ்’ ஏற்படும்வரை, ‘இறைவா, இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா, இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று வானவர்கள் (அவருக்காகப்) பிரார்த்திக்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸில் இடம்பெறும் ‘ஹதஸ்’ என்றால் என்னவென்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் தாம் வினவியபோது, “ஒலியுடனோ ஒலியின்றியோ காற்றுப் பிரிவதாகும்” என்று பதிலளித்ததாக அபூராஃபிஉ (ரஹ்) கூறுகிறார்.

Share this Hadith:

Leave a Comment