அத்தியாயம்: 5, பாடம்: 51, ஹதீஸ் எண்: 1068

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يُحَدِّثُ قَالَ حَدَّثَنِي ‏ ‏الْجُرَيْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

خَلَتْ ‏ ‏الْبِقَاعُ ‏ ‏حَوْلَ الْمَسْجِدِ فَأَرَادَ ‏ ‏بَنُو سَلِمَةَ ‏ ‏أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُمْ ‏ ‏إِنَّهُ بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا ‏ ‏بَنِي سَلِمَةَ ‏ ‏دِيَارَكُمْ تُكْتَبْ ‏ ‏آثَارُكُمْ ‏ ‏دِيَارَكُمْ تُكْتَبْ ‏ ‏آثَارُكُمْ

(நபிப்) பள்ளிவாசலைச் சுற்றிலும் வெற்றிடம் இருந்தது. பனூஸலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “நீங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் குடிபெயரப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?”என்று கேட்டார்கள். அதற்கு பனூஸலிமா குலத்தார் “ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல், “பனூஸலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (நன்மைகளாகப்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (நன்மைகளாகப்) பதிவு செய்யப்படும்” என்று (இருமுறை) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment