و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ عَنْ أَنَسٍ قَالَ :
سَأَلْتُهُ عَنْ الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَ الرُّكُوعِ فَقَالَ قَبْلَ الرُّكُوعِ قَالَ قُلْتُ فَإِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ فَقَالَ إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَى أُنَاسٍ قَتَلُوا أُنَاسًا مِنْ أَصْحَابِهِ يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “குனூத் ருகூஉக்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது ஓதப்பட்டது)?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி), “ருகூஉக்கு முன்புதான்” என்று பதிலளித்தார்கள். நான் “ருகூஉக்குப் பின்னர்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குனூத் ஓதினார்கள் என்று சிலர் கூறுகின்றனரே?” என்று கேட்டேன் அதற்கு அனஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருமாத காலம்தான் (ருகூஉவிற்குப் பிறகு) குனூத் ஓதினார்கள். அதில் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட தம் தோழர்களைக் கொன்றவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஆஸிம் அல் அஹ்வல் (ரஹ்)