حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ قَالَ لِيَ الزُّهْرِيُّ أَلاَ أُحَدِّثُكَ بِحَدِيثَيْنِ عَجِيبَيْنِ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ :
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ” أَسْرَفَ رَجُلٌ عَلَى نَفْسِهِ فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ أَوْصَى بَنِيهِ فَقَالَ إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي ثُمَّ اسْحَقُونِي ثُمَّ اذْرُونِي فِي الرِّيحِ فِي الْبَحْرِ فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ عَلَىَّ رَبِّي لَيُعَذِّبُنِي عَذَابًا مَا عَذَّبَهُ بِهِ أَحَدًا . قَالَ فَفَعَلُوا ذَلِكَ بِهِ فَقَالَ لِلأَرْضِ أَدِّي مَا أَخَذْتِ . فَإِذَا هُوَ قَائِمٌ فَقَالَ لَهُ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ فَقَالَ خَشْيَتُكَ يَا رَبِّ – أَوْ قَالَ – مَخَافَتُكَ . فَغَفَرَ لَهُ بِذَلِكَ ”
قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِي حُمَيْدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا فَلاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ هِيَ أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ هَزْلاً ” . قَالَ الزُّهْرِيُّ ذَلِكَ لِئَلاَّ يَتَّكِلَ رَجُلٌ وَلاَ يَيْأَسَ رَجُلٌ
حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، قَالَ الزُّهْرِيُّ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ” أَسْرَفَ عَبْدٌ عَلَى نَفْسِهِ ” . بِنَحْوِ حَدِيثِ مَعْمَرٍ إِلَى قَوْلِهِ ” فَغَفَرَ اللَّهُ لَهُ ” . وَلَمْ يَذْكُرْ حَدِيثَ الْمَرْأَةِ فِي قِصَّةِ الْهِرَّةِ وَفِي حَدِيثِ الزُّبَيْدِيِّ قَالَ ” فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِكُلِّ شَىْءٍ أَخَذَ مِنْهُ شَيْئًا أَدِّ مَا أَخَذْتَ مِنْهُ ”
என்னிடம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), “வியப்பூட்டும் இரு ஹதீஸ்களை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அறிவித்த ஹதீஸைச் சொன்னார்கள் என மஅமர் பின் ராஷித் (ரஹ்) கூறியதாவது:
தமக்குத்தாமே (பாவச் செயல்களால்) எல்லை மீறி (முற்காலத்தில்) வாழ்ந்த ஒவருக்கு மரண வேளை வந்தபோது, தம் மகன்களிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார்: “நான் இறந்து விட்டால் என்னை எரித்துத் தூளாக்கி, பிறகு கடலில் காற்றில் தூற்றிவிடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! என்மீது என் இறைவனுக்குச் சக்தியேற்பட்டால் எவரையும் வேதனை செய்யாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் நிச்சயமாக அளிப்பான்” என்று கூறினார்.
அவ்வாறே (அவர் இறந்ததும் அவருடைய) மகன்கள் செய்தனர். பிறகு அல்லாஹ், பூமியை நோக்கி, “நீ எடுத்ததை(ஒன்றுசேர்த்து)க் கொடுத்துவிடு” என்று கட்டளையிட்டான். அப்போது அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு வடிவில்) நின்றார். அவரிடம் அல்லாஹ், “நீ இப்படிச் செய்ய என்ன காரணம்?” என்று கேட்டான்.
அவர், “என் இறைவா! உன் மீதுள்ள அச்சம்தான் (காரணம்)” என்று பதிலளித்தார். அவ்வாறு அவர் கூறியதால் அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்)
குறிப்புகள் :
“ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டுக்) கட்டிவைத்த காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; பூமியின் புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக்கொள்ளட்டும் என அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லை. முடிவில் அது மெலிந்து போய் செத்துவிட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என ஸுஹ்ரீ (ரஹ்) இன்னொரு ஹதீஸையும் கூறினார்.
ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்: எந்த மனிதரும் (இறையருளை) முழுவதுமாக நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும், எந்த மனிதரும் (இறையருள்மீது) அவநம்பிக்கை கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்தத் தகவல்கள் கூறப்படுகின்றன.
ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்) வழி அறிவுப்புகளில், முதல் ஹதீஸில்,“அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான்” என்பதுவரையே இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது ஹதீஸில், பூனையைக் கட்டிப்போட்ட அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தி இடம்பெறவில்லை.
ஸுபைதீ (ரஹ்) வழி அறிவிப்பில், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவரது உடலிலிருந்து எடுத்துக்கொண்ட ஒவ்வொன்றிடமும் ‘அவரது உடலிலிருந்து நீ எடுத்ததைக் கொடுத்துவிடு’ என்று கட்டளையிட்டான்” என இடம்பெற்றுள்ளது.