அத்தியாயம்: 52, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4989

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَأَبُو دَاوُدَ ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَأَبُو دَاوُدَ كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ :‏

انْشَقَّ الْقَمَرُ فِرْقَتَيْنِ 


وَفِي حَدِيثِ أَبِي دَاوُدَ انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

நிலவு இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.

அறிவிப்பாளர் :  அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

நிலவுப் பிளவு நிகழ்ந்தபோது அனஸ் (ரலி) மதீனாவில் வாழ்ந்த ஐந்து வயதுச் சிறுவர். நபி (ஸல்) அவர்களின் புலப் பெயர்வுக்குப் பின்னர், மக்காவிலிருந்து புலம் பெயர்ந்துவந்த மூத்தோர்கள் மூலம் அறியப்பெற்று இதை அனஸ் (ரலி) அறிவிக்கின்றார் என்பதே யதார்த்தத்தில் சரியாக இருக்கும்.

அபூதாவூத் அத்தயாலிஸீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நிலவு பிளந்தது” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: