حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” يُجَاءُ بِالْمَوْتِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ كَبْشٌ أَمْلَحُ – زَادَ أَبُو كُرَيْبٍ – فَيُوقَفُ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ – وَاتَّفَقَا فِي بَاقِي الْحَدِيثِ – فَيُقَالُ يَا أَهْلَ الْجَنَّةِ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ وَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ – قَالَ – وَيُقَالُ يَا أَهْلَ النَّارِ هَلْ تَعْرِفُونَ هَذَا قَالَ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ وَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ – قَالَ – فَيُؤْمَرُ بِهِ فَيُذْبَحُ – قَالَ – ثُمَّ يُقَالُ يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ فَلاَ مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلاَ مَوْتَ ” . قَالَ ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم { وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لاَ يُؤْمِنُونَ} وَأَشَارَ بِيَدِهِ إِلَى الدُّنْيَا
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِذَا أُدْخِلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ قِيلَ يَا أَهْلَ الْجَنَّةِ ” . ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ غَيْرَ أَنَّهُ قَالَ ” فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ ” . وَلَمْ يَقُلْ ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . وَلَمْ يَذْكُرْ أَيْضًا وَأَشَارَ بِيَدِهِ إِلَى الدُّنْيَا
“மறுமை நாளில், உப்பு (வெள்ளை) நிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். பிறகு, ‘சொர்க்கவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?‘ என்று கேட்கப்படும். அப்போது சொர்க்கவாசிகள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, ‘ஆம்; (தெரியும்) இதுதான் மரணம்‘ என்று பதிலளிப்பார்கள்.
பிறகு (நரகவாசிகளை நோக்கி), ‘நரகவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?‘ என்று கேட்கப்படும். அவர்களும் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, ‘ஆம் (தெரியும்). இதுதான் மரணம்‘ என்று பதில் சொல்வார்கள்.
உடனே (இறைவனின்) கட்டளைக்கேற்ப அந்த (ஆட்டின் உருவத்திலுள்ள) மரணம் அறுக்கப்பட்டுவிடும். பிறகு ‘நிரந்தர சொர்க்கவாசிகளே! இனி (உங்களுக்கு) மரணமே இல்லை; நிரந்தர நரகவாசிகளே! இனி (உங்களுக்கு) மரணம் என்பதே இல்லை‘ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
குறிப்புகள் :
“இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்தக் கைசேதத்துக்குரிய நாளைப் பற்றி, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும் நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்’ எனும் (19:39) இறைவசனத்தை ஓதிக்காட்டியவாறு தமது கரத்தால் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்“ என்று இதன் அறிவிப்பாளர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) கூறுகின்றார்கள்.
“… மரணம் கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே நிறுத்தப்படும் …” என அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது).
ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பு, “ … சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பின் ‘சொர்க்கவாசிகளே!’ என அழைக்கப்படும் …” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், “இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் 19:39ஆவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்” என இடம்பெற்றுள்ளது.
“… பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அந்த 19:39 ஆவது வசனத்தை) ஓதிக்காட்டினார்கள்” என்பதோ “தமது கரத்தால் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்” என்பதோ இடம்பெறவில்லை.