حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ قَالَ :
خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ النَّاقَةَ وَذَكَرَ الَّذِي عَقَرَهَا فَقَالَ ” إِذِ انْبَعَثَ أَشْقَاهَا انْبَعَثَ بِهَا رَجُلٌ عَزِيزٌ عَارِمٌ مَنِيعٌ فِي رَهْطِهِ مِثْلُ أَبِي زَمْعَةَ ” . ثُمَّ ذَكَرَ النِّسَاءَ فَوَعَظَ فِيهِنَّ ثُمَّ قَالَ ” إِلاَمَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ ” . فِي رِوَايَةِ أَبِي بَكْرٍ ” جَلْدَ الأَمَةِ ” . وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ ” جَلْدَ الْعَبْدِ وَلَعَلَّهُ يُضَاجِعُهَا مِنْ آخِرِ يَوْمِهِ ” . ثُمَّ وَعَظَهُمْ فِي ضَحِكِهِمْ مِنَ الضَّرْطَةِ فَقَالَ ” إِلاَمَ يَضْحَكُ أَحَدُكُمْ مِمَّا يَفْعَلُ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரையாற்றினார்கள். அப்போது (இறைத்தூதர் ஸாலிஹ் அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் அத(ன் கால் நரம்பி)னைத் துண்டித்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்களில் நற்பேறற்ற ஒருவன் முன் வந்தான் …” எனும் (91:12) இறைவசனத்தைக் கூறிவிட்டு, “அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் (ஸமூத்) சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனும் ஆதிக்கவாதியும் பலசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன்வந்தான்” என்று சொன்னார்கள்.
பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து அறிவுறுத்தினார்கள்; பிறகு “உங்களில் ஒருவர் தம் மனைவியை (அடிமையை அடிப்பதைப் போன்று) அடிக்க முற்படுகின்றார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன்தான் படுக்க நேரிடும். (இது முறையா?)” என்று கூறினார்கள்.
பிறகு, (பின் துவார வழியாகக்) காற்றுப் பிரிந்தால் மக்கள் சிரிப்பது குறித்து, “உங்களில் ஒருவருக்கு நிகழும் (இயல்பான) செயல், பிறருக்கு நிகழும்போது (கேலியாகச்) சிரிக்கலாமா?” என்று கேட்டு உபதேசித்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)
குறிப்புகள் :
அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “ … அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போன்று …” எனக் காணப்படுகிறது. அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “ … அடிமையை அடிப்பதைப் போன்று …” என இடம்பெற்றுள்ளது.