அத்தியாயம்: 54, பாடம்: 16, ஹதீஸ் எண்: 5145

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، وَوَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، وَأَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبَانَ – قَالُوا حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَقُولُ :‏

يَا أَهْلَ الْعِرَاقِ مَا أَسْأَلَكُمْ عَنِ الصَّغِيرَةِ وَأَرْكَبَكُمْ لِلْكَبِيرَةِ سَمِعْتُ أَبِي عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ إِنَّ الْفِتْنَةَ تَجِيءُ مِنْ هَا هُنَا ‏”‏ ‏.‏ وَأَوْمَأَ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ ‏”‏ مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ ‏”‏ ‏.‏ وَأَنْتُمْ يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ وَإِنَّمَا قَتَلَ مُوسَى الَّذِي قَتَلَ مِنْ آلِ فِرْعَوْنَ خَطَأً فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ ‏{‏ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا‏}‏


قَالَ أَحْمَدُ بْنُ عُمَرَ فِي رِوَايَتِهِ عَنْ سَالِمٍ لَمْ يَقُلْ سَمِعْتُ ‏

ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறினார்கள்: இராக்வாசிகளே! நீங்கள் பெரும்பாவத்தைச் செய்துகொண்டு, சிறு பாவத்தைப் பற்றி விசாரிப்பது எனக்கு வியப்பையே அளிக்கிறது. என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “கிழக்குத் திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தவாறு, குழப்பம் அங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து” என்று கூறியதை நான் கேட்டேன்.

(இராக்வாசிகளே!) உங்களில் சிலர், வேறு சிலரது கழுத்தை வெட்டிக்கொண்டிருக்கின்றீர்கள். (அதைப் பற்றிக் கேட்டால் இறைத்தூதர் மூஸா, ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைக் கொன்றதைச் சான்றாகக் கூறுவீர்கள்) மூஸா (அலை), ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைத் தவறுதலாகக் கொன்றார்.

எனவேதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம், “நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து நாம் காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்” என்று கூறினான் (20:40) .

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக ஃபுளைல் பின் ஃகஸ்வான் (ரஹ்)

Share this Hadith: