அத்தியாயம்: 54, பாடம்: 19, ஹதீஸ் எண்: 5190

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا حُسَيْنٌ، – يَعْنِي ابْنَ حَسَنِ بْنِ يَسَارٍ – حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ نَافِعٍ قَالَ كَانَ نَافِعٌ يَقُولُ ابْنُ صَيَّادٍ ‏‏ قَالَ :‏

قَالَ ابْنُ عُمَرَ لَقِيتُهُ مَرَّتَيْنِ – قَالَ – فَلَقِيتُهُ فَقُلْتُ لِبَعْضِهِمْ هَلْ تَحَدَّثُونَ أَنَّهُ هُوَ قَالَ لاَ وَاللَّهِ – قَالَ – قُلْتُ كَذَبْتَنِي وَاللَّهِ لَقَدْ أَخْبَرَنِي بَعْضُكُمْ أَنَّهُ لَنْ يَمُوتَ حَتَّى يَكُونَ أَكْثَرَكُمْ مَالاً وَوَلَدًا فَكَذَلِكَ هُوَ زَعَمُوا الْيَوْمَ – قَالَ – فَتَحَدَّثْنَا ثُمَّ فَارَقْتُهُ – قَالَ – فَلَقِيتُهُ لَقْيَةً أُخْرَى وَقَدْ نَفَرَتْ عَيْنُهُ – قَالَ – فَقُلْتُ مَتَى فَعَلَتْ عَيْنُكَ مَا أَرَى قَالَ لاَ أَدْرِي – قَالَ – قُلْتُ لاَ تَدْرِي وَهِيَ فِي رَأْسِكَ قَالَ إِنْ شَاءَ اللَّهُ خَلَقَهَا فِي عَصَاكَ هَذِهِ ‏.‏ قَالَ فَنَخَرَ كَأَشَدِّ نَخِيرِ حِمَارٍ سَمِعْتُ – قَالَ – فَزَعَمَ بَعْضُ أَصْحَابِي أَنِّي ضَرَبْتُهُ بِعَصًا كَانَتْ مَعِيَ حَتَّى تَكَسَّرَتْ وَأَمَّا أَنَا فَوَاللَّهِ مَا شَعَرْتُ – قَالَ – وَجَاءَ حَتَّى دَخَلَ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ فَحَدَّثَهَا فَقَالَتْ مَا تُرِيدُ إِلَيْهِ أَلَمْ تَعْلَمْ أَنَّهُ قَدْ قَالَ ‏ “‏ إِنَّ أَوَّلَ مَا يَبْعَثُهُ عَلَى النَّاسِ غَضَبٌ يَغْضَبُهُ ‏”‏

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நான் இப்னு ஸய்யாதை இரு முறை சந்தித்தேன். முதல் முறை சந்தித்துவிட்டு வந்து அவ(னுடைய நண்ப)ர்களில் ஒருவரிடம், “இவன் (இப்னு ஸய்யாத்), (நபி) என்று நீங்கள் பேசிக்கொள்கின்றீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை” என்று பதிலளித்தார்.

அதற்கு நான், “நீர் என்னிடம் பொய் சொல்கின்றீர். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னிடம், ‘அவன் உங்களிலேயே அதிகச் செல்வமும் நிறைய குழந்தைகளும் உள்ளவனாக ஆகாத வரை மரணிக்கமாட்டான்’ என்று கூறினார்கள். அவனைப் பற்றி அவ்வாறே இன்றும் அவர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அவனை  (நபி என்று கருதாவிட்டால் அவ்வளவு உறுதியாக நீங்கள் எப்படி இவ்வாறு நம்பினீர்கள்?)”  என்று கேட்டேன் என்று கூறினார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்: பிறகு நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவனிடமிருந்து நான் வந்துவிட்டேன். பிறகு அவனை மறுபடியும் நான் சந்தித்தபோது, அவனது கண் ஒன்று வீங்கிப் புடைத்திருந்தது. நான், “இப்போது நான் காணுகின்ற நிலையில் உன்னுடைய கண் எப்போது மாறியது?” என்று கேட்டேன். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தான். “உன் முகத்திலேயே அது இருக்க, உனக்கு எப்படி தெரியாமல் போகும்?” என்று கேட்டேன்.

அதற்கு அவன், “அல்லாஹ் நாடினால் உம்முடைய இந்தக் கைத்தடிக்கும் அல்லாஹ் (இந்தக்  குறையுள்ள) கண்ணை உருவாக்குவான்” என்று கூறிவிட்டு, கழுதையைப் போன்று மிகக் கடுமையாகக் கத்தினான். அப்போது என் தோழர்களில் சிலர், நான்தான் அவனை என்னிடமிருந்த கைத்தடியால் அது உடையும் அளவுக்கு அடித்துவிட்டேன் என்று எண்:ணினர். “அல்லாஹ்வின் மீதாணையாக! அ(வன் கத்திய)தற்கான காரணத்தை நான் அறியவில்லை.

பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஹஃப்ஸா-ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றித் தெரிவித்தார்கள். அதற்கு இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரலி), “அவனிடம் உமக்கென்ன வேலை?” என்று கேட்டுவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவனுக்கு (தஜ்ஜாலுக்கு) ஏற்படும் கோபம் மிகைத்து, அவன் மக்களிடையே முதன் முதலில் வருவான்’ என்று கூறியதை நீர் அறிந்திருக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

Share this Hadith: