அத்தியாயம்: 55, பாடம்: 1, ஹதீஸ் எண்: 5264

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، – وَهُوَ يَذْكُرُ الْحِجْرَ مَسَاكِنَ ثَمُودَ – قَالَ سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ :‏

مَرَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْحِجْرِ فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ حَذَرًا أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ ‏”‏ ‏.‏ ثُمَّ زَجَرَ فَأَسْرَعَ حَتَّى خَلَّفَهَا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ’ஹிஜ்ரு’ பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, “தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு நேர்ந்த அதே சோதனை உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்றஞ்சி, அழுதபடியே செல்லுங்கள்” என்று எங்களிடம் கூறினார்கள். பிறகு தமது வாகனத்தை விரட்டிக்கொண்டு, மிக விரைவாக அந்த இடத்தைக் கடந்துசென்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), ஸமூதுக் கூட்டத்தாரின் வசிப்பிடமான ’ஹிஜ்ரு’ பற்றிக் கூறும்போது இதை அறிவித்தார்கள்.

Share this Hadith: