அத்தியாயம்: 56, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5321

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ – قَالَ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

لَقِيَ نَاسٌ مِنَ الْمُسْلِمِينَ رَجُلاً فِي غُنَيْمَةٍ لَهُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ ‏.‏ فَأَخَذُوهُ فَقَتَلُوهُ وَأَخَذُوا تِلْكَ الْغُنَيْمَةَ فَنَزَلَتْ ‏{‏ وَلاَ تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلَمَ لَسْتَ مُؤْمِنًا‏}‏ وَقَرَأَهَا ابْنُ عَبَّاسٍ السَّلاَمَ ‏

ஒருவர் தமது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக்கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) சந்தித்தனர். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று (இஸ்லாமிய முகமன்) கூறி(தம்மை முஸ்லிம் என இனம் காட்டி)னார். ஆனால், அவரைப் பிடித்து அவர்கள் கொன்றுவிட்டனர்; அந்த ஆட்டு மந்தையையும் எடுத்துக்கொண்டனர்.

அப்போதுதான், “உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம், இவ்வுலக வாழ்க்கையின் (அற்பப்) பொருளை அடைந்துகொள்ளவதற்காக ’நீ இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று கூறி (அவரைக் கொன்று)விடாதீர்கள்” எனும் (4:94) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இந்த (4:94ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ’அஸ்ஸலம்’ எனும் சொல்லை, இப்னு அப்பாஸ் (ரலி) ’அஸ்ஸலாம்’ என்று ஓதினார்கள்.

Share this Hadith: