அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1113

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏قَالَ ‏

مَرِضْتُ مَرَضًا فَجَاءَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يَعُودُنِي ‏ ‏قَالَ وَسَأَلْتُهُ عَنْ ‏ ‏السُّبْحَةِ ‏ ‏فِي السَّفَرِ فَقَالَ ‏ ‏صَحِبْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي السَّفَرِ فَمَا رَأَيْتُهُ ‏ ‏يُسَبِّحُ ‏ ‏وَلَوْ كُنْتُ ‏ ‏مُسَبِّحًا ‏ ‏لَأَتْمَمْتُ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى ‏‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) வந்தார்கள். அவர்களிடம் நான் பயணத்தில் (ஸுன்னத்தான) கூடுதல் தொழுகைகள் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்திருக்கிறேன். அவர்கள் (இந்தக்) கூடுதலான தொழுகைகள் தொழுவதை நான் பார்த்ததேயில்லை. நான் (பயணத்தில்) கூடுதலான தொழுகைகளைத் தொழுபவனாயிருந்தால் (கடமையான தொழுகையையே) நிறைவாகத் தொழுதிருப்பேன். ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (33:21) என்று உயர்ந்தோனான அல்லாஹ் கூறுகின்றான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஹஃப்ஸிப்னு ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment