அத்தியாயம்: 6, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1198

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ أَوْسٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَنْبَسَةُ بْنُ أَبِي سُفْيَانَ ‏ ‏فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ بِحَدِيثٍ يَتَسَارُّ إِلَيْهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أُمَّ حَبِيبَةَ ‏ ‏تَقُولُ ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ ‏

‏قَالَتْ ‏ ‏أُمُّ حَبِيبَةَ ‏ ‏فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ ‏ ‏عَنْبَسَةُ ‏ ‏فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ ‏ ‏أُمِّ حَبِيبَةَ ‏ ‏وَقَالَ ‏ ‏عَمْرُو بْنُ أَوْسٍ ‏ ‏مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ ‏ ‏عَنْبَسَةَ ‏ ‏وَقَالَ ‏ ‏النُّعْمَانُ بْنُ سَالِمٍ ‏ ‏مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ ‏ ‏عَمْرِو بْنِ أَوْسٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ سَالِمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مَنْ صَلَّى فِي يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ سَجْدَةً تَطَوُّعًا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ

“ஒரு நாளின் இரவிலும் பகலிலும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுபவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற, நான் செவியேற்றிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அன்னை உம்முஹபீபா (ரலி)

குறிப்பு :

“இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை” என உம்முஹபீபா (ரலி) கூறினார்கள்.

“இதை நான் உம்முஹபீபா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை” என இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அன்பஸா பின் அபீஸுஃப்யான் (ரஹ்) கூறினார்.

“இதை நான் அன்பஸா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை” என அறிவிப்பாளர்களுள் ஒருவரான அம்ரு பின் அவ்ஸ் (ரஹ்) கூறினார்.

“இதை நான் அம்ரு பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறக் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை” என அறிவிப்பாளர்களுள் ஒருவரான நுஃமான் பின் ஸாலிம் (ரஹ்) கூறினார்.

இதே ஹதீஸ் பிஷ்ரு பின் அல்முஃபள்லல் வழியில், “யார் ஒவ்வொரு நாளும் கூடுதலாகப் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது” என அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment