و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ :
سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ قَالَ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ كَيْفَ كَانَ عَمَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ يَخُصُّ شَيْئًا مِنْ الْأَيَّامِ قَالَتْ لَا كَانَ عَمَلُهُ دِيمَةً وَأَيُّكُمْ يَسْتَطِيعُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَطِيعُ
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (வழிபாட்டுச்) செயல் எவ்வாறிருந்தது? சிறப்பு (வழிபாட்டு) செயலுக்கென குறிப்பிட்ட நாட்கள் எதையும் அவர்கள் ஒதுக்கியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை. அவர்களின் (வழிபாட்டுச்) செயல்பாடு என்பது நிரந்தரமானதாகவே இருந்தது” என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இயன்ற(வழிபாடுகளில் நிரந்தரம் என்ப)தைப் போன்று உங்களில் எவரால் இயலும்?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்)