அத்தியாயம்: 6, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1333

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مِسْعَرٌ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏اقْرَأْ عَلَيَّ قَالَ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي قَالَ فَقَرَأَ عَلَيْهِ مِنْ أَوَّلِ سُورَةِ ‏ ‏النِّسَاءِ ‏ ‏إِلَى قَوْلِهِ ‏

‏فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا ‏

‏فَبَكَى ‏
‏قَالَ ‏ ‏مِسْعَرٌ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏مَعْنٌ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَهِيدًا عَلَيْهِمْ مَا دُمْتُ فِيهِمْ ‏ ‏أَوْ مَا كُنْتُ فِيهِمْ شَكَّ ‏ ‏مِسْعَرٌ

நபி (ஸல்) என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். நான், “குர்ஆன் அருளப்படுவதே உங்கள் மீது. தங்களுக்கு நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன்.. அதற்கு அவர்கள், “நான் பிறரிடமிருந்து அதைச் செவியுற விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு அந்நிசா எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஆரம்பம் முதல் ஓதிக் காட்டினே. “…ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” (4:41) என்பதுவரை ஓதிக் காட்டினேன். அதைக் கேட்டு அவர்கள் அழுதார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக, இப்ராஹீம் அந்நகயீ (ரஹ்)

குறிப்பு :

மிஸ்அர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அவர்களிடையே (உயிருடன்) இருந்தபோது / இருந்தவரையில் அவர்களை நான் கண்காணித்துக் கொண்டிருந்தேன்” என்று (அப்போது) நபி (ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்ததாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment