அத்தியாயம்: 6, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1334

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ ‏ ‏بِحِمْصَ ‏ ‏فَقَالَ لِي بَعْضُ الْقَوْمِ اقْرَأْ عَلَيْنَا فَقَرَأْتُ عَلَيْهِمْ سُورَةَ ‏ ‏يُوسُفَ ‏ ‏قَالَ فَقَالَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ الْقَوْمِ وَاللَّهِ مَا هَكَذَا أُنْزِلَتْ ‏ ‏قَالَ ‏

‏قُلْتُ وَيْحَكَ وَاللَّهِ ‏ ‏لَقَدْ قَرَأْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لِي أَحْسَنْتَ ‏

‏فَبَيْنَمَا أَنَا أُكَلِّمُهُ إِذْ وَجَدْتُ مِنْهُ رِيحَ الْخَمْرِ قَالَ فَقُلْتُ أَتَشْرَبُ الْخَمْرَ وَتُكَذِّبُ بِالْكِتَابِ لَا ‏ ‏تَبْرَحُ ‏ ‏حَتَّى أَجْلِدَكَ قَالَ فَجَلَدْتُهُ الْحَدَّ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏فَقَالَ لِي أَحْسَنْتَ

நான் (சிரியா நாட்டின்) ஹிம்ஸில் இருந்தபோது மக்களில் சிலர், “எங்களுக்கு (க் குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!” என்று வேண்டினர். நான் யூஸுஃப் (எனும் 12ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த அத்தியாயம் இவ்வாறு அருளப்படவில்லை” என்று கூறினார். நான், “உமக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச் சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தேன். (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது அவரது வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டேன். “மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா? (மது அருந்திய குற்றத்திற்காக) நீ சாட்டையடி பெறாமல் இந்த இடத்திலிருந்து நகர முடியாது” என்று கூறிவிட்டு, அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக, அல்கமா பின் கைஸ் (ரஹ்)

குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், ‘மிகச் சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment