அத்தியாயம்: 6, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1356

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏جَدِّهِ ‏ ‏عَنْ ‏ ‏أُبَيِّ بْنِ كَعْبٍ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ ‏ ‏يُصَلِّي فَقَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ ثُمَّ دَخَلَ آخَرُ فَقَرَأَ قِرَاءَةً سِوَى قَرَاءَةِ صَاحِبِهِ فَلَمَّا قَضَيْنَا الصَّلَاةَ دَخَلْنَا جَمِيعًا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ إِنَّ هَذَا قَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ وَدَخَلَ آخَرُ فَقَرَأَ سِوَى قِرَاءَةِ صَاحِبِهِ فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَرَأَا فَحَسَّنَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَأْنَهُمَا فَسَقَطَ فِي نَفْسِي مِنْ التَّكْذِيبِ وَلَا إِذْ كُنْتُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا قَدْ ‏ ‏غَشِيَنِي ‏ ‏ضَرَبَ فِي صَدْرِي فَفِضْتُ عَرَقًا وَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ ‏ ‏فَرَقًا ‏ ‏فَقَالَ لِي يَا ‏ ‏أُبَيُّ ‏ ‏أُرْسِلَ إِلَيَّ أَنْ اقْرَأْ الْقُرْآنَ عَلَى ‏ ‏حَرْفٍ ‏ ‏فَرَدَدْتُ إِلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي فَرَدَّ إِلَيَّ الثَّانِيَةَ اقْرَأْهُ عَلَى ‏ ‏حَرْفَيْنِ ‏ ‏فَرَدَدْتُ إِلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي فَرَدَّ إِلَيَّ الثَّالِثَةَ اقْرَأْهُ عَلَى سَبْعَةِ ‏ ‏أَحْرُفٍ ‏ ‏فَلَكَ بِكُلِّ رَدَّةٍ رَدَدْتُكَهَا مَسْأَلَةٌ تَسْأَلُنِيهَا فَقُلْتُ اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي وَأَخَّرْتُ الثَّالِثَةَ لِيَوْمٍ ‏ ‏يَرْغَبُ ‏ ‏إِلَيَّ الْخَلْقُ كُلُّهُمْ حَتَّى ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أُبَيُّ بْنُ كَعْبٍ ‏ ‏أَنَّهُ كَانَ جَالِسًا فِي الْمَسْجِدِ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَرَأَ قِرَاءَةً وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ

(ஒரு முறை) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் வந்து தொழலானார்; (தொழுகையில் குர்ஆன் வசனங்களை) நான் அறிந்திராத நடையில் ஓதினார். பிறகு மற்றொருவர் வந்து (அதே வசனங்களை) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார். தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான்,”இவர் குர்ஆனை நான் அறிந்திராத (ஓதல்) நடையில் ஓதினார். பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக (அதையே) வேறு நடையில் ஓதினார்” என்றேன். நபி (ஸல்) அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள். அவ்விருவரும் ஓதினர். நபி (ஸல்), “அவ்விருவரும் சரியாகவே ஓதினர்” எனக் கூறினார்கள். (இதைக் கேட்டவுடன்) அறியாமைக் காலத்தில்கூட என் உள்ளத்தில் ஏற்படாத நபியவர்கள் பொய்யுரைக்கிறார்களோ் என்ற எண்ணம் விழுந்தது. என்னை ஆட்கொண்டிருந்த(அந்த எண்ணத்)தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என் முகத்தில்) கண்டுகொண்டு, என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள். (அடி விழுந்ததும்) எனக்கு வியர்த்துக் கொட்டியது! அல்லாஹ்வை நேரில் கண்டதைப் போன்று எனக்கு அச்சம் ஏற்பட்டது! அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “உபை! குர்ஆனை ஒரே மொழிநடையில் ஓதுவீராக என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது குர்ஆனை இரு நடைகளில் ஓதிக்கொள்வீராக! என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படிக் கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு நடைகளில் ஓதிக்கொள்ளும்படி எனக்கு இறைவன் (அனுமதி) அறிவித்தான். மேலும், ‘நீர் கோரிய (மூன்று கோரிக்கைகளில்) ஒவ்வொரு கோரிக்கைக்கும் பகரமாக என்னிடம் உமக்கு ஓர் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை உண்டு’ என்றும் (இறைவன்) கூறினான். எனவே நான், இறைவா! என் சமுதாயத்தாரை மன்னிப்பாயாக! இறைவா! என் சமுதாயத்தாரின் குற்றங்குறைகளை மறைப்பாயாக!’ என (இரண்டு) பிரார்த்தனை செய்தேன். (இவ்விரு பிரார்த்தனைகள் அல்லாமல்) மூன்றாவது பிரார்த்தனையை நான் ஒரு நாளுக்காகத் தாமதப்படுத்தி (பத்திரப்படுத்தி) வைத்துள்ளேன். அந்நாளில் படைப்பினங்கள் அனைத்தும் என்னிடம் (பரிந்துரைக்கும்படி) ஆவலுடன் வருவார்கள்; இப்ராஹீம் (அலை) அவர்கள் உட்பட” எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபை பின் கஅப் (ரலி)

குறிப்பு :

முஹம்மது பின் பிஷ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “… நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்து குர்ஆனை ஒரு மாதிரியான நடையில் ஓதித் தொழுதார் …” என்று உபை பின் கஅப் (ரலி) கூறினார்கள் என்பதாக ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.

Share this Hadith:

Leave a Comment