அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1147

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏وَعَوْنُ بْنُ سَلَّامٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

قَالَ ‏ ‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فِي غَيْرِ خَوْفٍ وَلَا سَفَرٍ ‏

قَالَ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏فَسَأَلْتُ ‏ ‏سَعِيدًا ‏ ‏لِمَ فَعَلَ ذَلِكَ فَقَالَ سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏كَمَا سَأَلْتَنِي فَقَالَ ‏ ‏أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أَحَدًا مِنْ أُمَّتِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் (போர்க்கால) அச்ச நிலையிலோ பயணத்திலோ இல்லாத சூழலில், லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரேநேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஸயீத் (ரஹ்) அவர்கள், “நீர் என்னிடம் வினவியதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கவர்கள், ‘தம் சமுதாயத்தாரில் எவருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருதினார்கள் (எனவேதான் இவ்வாறு செய்தார்கள்)’ என விடையளித்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) விடையளித்ததை ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) எடுத்துரைத்ததாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

Share this Hadith:

Leave a Comment