அத்தியாயம்: 6, பாடம்: 50, ஹதீஸ் எண்: 1374

حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو عَمَّارٍ ‏ ‏وَيَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُمَامَةَ ‏ ‏قَالَ ‏ ‏عِكْرِمَةُ ‏ ‏وَلَقِيَ ‏ ‏شَدَّادٌ ‏ ‏أَبَا أُمَامَةَ ‏ ‏وَوَاثِلَةَ ‏ ‏وَصَحِبَ ‏ ‏أَنَسًا ‏ ‏إِلَى ‏ ‏الشَّامِ ‏ ‏وَأَثْنَى عَلَيْهِ فَضْلًا وَخَيْرًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أُمَامَةَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَمْرُو بْنُ عَبَسَةَ السُّلَمِيُّ ‏
‏كُنْتُ وَأَنَا فِي الْجَاهِلِيَّةِ أَظُنُّ أَنَّ النَّاسَ عَلَى ضَلَالَةٍ وَأَنَّهُمْ لَيْسُوا عَلَى شَيْءٍ وَهُمْ يَعْبُدُونَ الْأَوْثَانَ فَسَمِعْتُ بِرَجُلٍ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏يُخْبِرُ أَخْبَارًا فَقَعَدْتُ عَلَى رَاحِلَتِي فَقَدِمْتُ عَلَيْهِ فَإِذَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُسْتَخْفِيًا ‏ ‏جُرَءَاءُ عَلَيْهِ قَوْمُهُ فَتَلَطَّفْتُ حَتَّى دَخَلْتُ عَلَيْهِ ‏ ‏بِمَكَّةَ ‏
‏فَقُلْتُ لَهُ مَا أَنْتَ قَالَ أَنَا نَبِيٌّ فَقُلْتُ وَمَا نَبِيٌّ قَالَ أَرْسَلَنِي اللَّهُ فَقُلْتُ وَبِأَيِّ شَيْءٍ أَرْسَلَكَ قَالَ ‏ ‏أَرْسَلَنِي بِصِلَةِ الْأَرْحَامِ وَكَسْرِ الْأَوْثَانِ وَأَنْ يُوَحَّدَ اللَّهُ لَا يُشْرَكُ بِهِ شَيْءٌ
قُلْتُ لَهُ فَمَنْ مَعَكَ عَلَى هَذَا قَالَ حُرٌّ وَعَبْدٌ قَالَ وَمَعَهُ يَوْمَئِذٍ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَبِلَالٌ ‏ ‏مِمَّنْ آمَنَ بِهِ فَقُلْتُ إِنِّي مُتَّبِعُكَ قَالَ إِنَّكَ لَا تَسْتَطِيعُ ذَلِكَ يَوْمَكَ هَذَا أَلَا ‏ ‏تَرَى حَالِي وَحَالَ النَّاسِ وَلَكِنْ ارْجِعْ إِلَى أَهْلِكَ فَإِذَا سَمِعْتَ بِي قَدْ ظَهَرْتُ فَأْتِنِي قَالَ فَذَهَبْتُ إِلَى أَهْلِي
وَقَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَكُنْتُ فِي أَهْلِي فَجَعَلْتُ أَتَخَبَّرُ الْأَخْبَارَ وَأَسْأَلُ النَّاسَ حِينَ قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏حَتَّى قَدِمَ عَلَيَّ نَفَرٌ مِنْ أَهْلِ ‏ ‏يَثْرِبَ ‏ ‏مِنْ أَهْلِ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَقُلْتُ مَا فَعَلَ هَذَا الرَّجُلُ الَّذِي قَدِمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَقَالُوا النَّاسُ إِلَيْهِ سِرَاعٌ وَقَدْ أَرَادَ قَوْمُهُ قَتْلَهُ فَلَمْ يَسْتَطِيعُوا ذَلِكَ
فَقَدِمْتُ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَدَخَلْتُ عَلَيْهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَعْرِفُنِي قَالَ نَعَمْ أَنْتَ الَّذِي لَقِيتَنِي ‏ ‏بِمَكَّةَ ‏ ‏قَالَ فَقُلْتُ بَلَى فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَخْبِرْنِي عَمَّا عَلَّمَكَ اللَّهُ وَأَجْهَلُهُ أَخْبِرْنِي عَنْ الصَّلَاةِ قَالَ صَلِّ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ ‏ ‏أَقْصِرْ ‏ ‏عَنْ الصَّلَاةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَتَّى تَرْتَفِعَ فَإِنَّهَا تَطْلُعُ حِينَ تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ
ثُمَّ صَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ ‏ ‏مَحْضُورَةٌ ‏ ‏حَتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بِالرُّمْحِ ثُمَّ ‏ ‏أَقْصِرْ ‏ ‏عَنْ الصَّلَاةِ فَإِنَّ حِينَئِذٍ ‏ ‏تُسْجَرُ ‏ ‏جَهَنَّمُ
فَإِذَا أَقْبَلَ ‏ ‏الْفَيْءُ ‏ ‏فَصَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ ‏ ‏مَحْضُورَةٌ ‏ ‏حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ ثُمَّ ‏ ‏أَقْصِرْ ‏ ‏عَنْ الصَّلَاةِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ
قَالَ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَالْوُضُوءَ حَدِّثْنِي عَنْهُ قَالَ مَا مِنْكُمْ رَجُلٌ يُقَرِّبُ وَضُوءَهُ فَيَتَمَضْمَضُ وَيَسْتَنْشِقُ ‏ ‏فَيَنْتَثِرُ ‏ ‏إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا وَجْهِهِ ‏ ‏وَفِيهِ ‏ ‏وَخَيَاشِيمِهِ
‏ثُمَّ إِذَا غَسَلَ وَجْهَهُ كَمَا أَمَرَهُ اللَّهُ إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا وَجْهِهِ مِنْ أَطْرَافِ لِحْيَتِهِ مَعَ الْمَاءِ
ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا يَدَيْهِ مِنْ ‏ ‏أَنَامِلِهِ ‏ ‏مَعَ الْمَاءِ
ثُمَّ يَمْسَحُ رَأْسَهُ إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا رَأْسِهِ مِنْ أَطْرَافِ شَعْرِهِ مَعَ الْمَاءِ
ثُمَّ يَغْسِلُ قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ إِلَّا ‏ ‏خَرَّتْ ‏ ‏خَطَايَا رِجْلَيْهِ مِنْ ‏ ‏أَنَامِلِهِ ‏ ‏مَعَ الْمَاءِ
فَإِنْ هُوَ قَامَ فَصَلَّى فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَمَجَّدَهُ بِالَّذِي هُوَ لَهُ ‏ ‏أَهْلٌ ‏ ‏وَفَرَّغَ قَلْبَهُ لِلَّهِ إِلَّا انْصَرَفَ مِنْ خَطِيئَتِهِ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ
فَحَدَّثَ ‏ ‏عَمْرُو بْنُ عَبَسَةَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏ ‏أَبَا أُمَامَةَ ‏ ‏صَاحِبَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏أَبُو أُمَامَةَ ‏ ‏يَا ‏ ‏عَمْرَو بْنَ عَبَسَةَ ‏ ‏انْظُرْ مَا تَقُولُ فِي مَقَامٍ وَاحِدٍ يُعْطَى هَذَا الرَّجُلُ فَقَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏يَا ‏ ‏أَبَا أُمَامَةَ ‏ ‏لَقَدْ كَبِرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي وَاقْتَرَبَ أَجَلِي وَمَا بِي حَاجَةٌ أَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ وَلَا عَلَى رَسُولِ اللَّهِ لَوْ لَمْ أَسْمَعْهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا حَتَّى عَدَّ سَبْعَ مَرَّاتٍ مَا حَدَّثْتُ بِهِ أَبَدًا وَلَكِنِّي سَمِعْتُهُ أَكْثَرَ مِنْ ذَلِكَ

நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்தபோது, ‘மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்களே! அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் இல்லாமல் சிலைகளை வணங்கிக்கொண்டிருக்கிறார்களே!’ என எண்ணி(வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லிவருவதாகக் கேள்விப்பட்டேன். எனவே, நான் எனது வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய சமுதாயத்தார் அவர்களுக்கெதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எனவே, நான் மிகுந்த எச்சரிக்கையுடன் மக்காவுக்குள் நுழைந்து அவர்களிடம் சென்று,

“நீங்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு “நான் ஒரு நபி” என்றார்கள். நான் “நபி என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு “அல்லாஹ் என்னை(த் தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்” என்று கூறினார்கள். நான் “என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?” என்று கேட்டேன். அதற்கு “இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை(வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்” என்று பதிலளித்தார்கள்.

நான் “இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் யாராவது உங்களுடன் இருக்கின்றார்களா?” என அவர்களிடம் வினவினேன். அதற்கு, “சுதந்திரமான (அபூபக்ரு) ஒருவரும் அடிமை (பிலால்) ஒருவரும் உள்ளனர்” என்றார்கள். “நானும் தங்களைப் பின்பற்ற விழைகிறேன்” என்று நான் கூறினேன். அதற்கவர்கள் “இந்தச் சூழ்நிலையில் உம்மால் என்னைப் பின்பற்ற இயலாது. எனது நிலையையும் (எனக்கெதிரான) மக்களின் நிலையையும் நீர் பார்க்கவில்லையா? (தற்போது) நீர் உம்முடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வீராக! நான் (அடக்குமுறையை வென்று) வெளிப்பட்டேன் என என்னைப் பற்றி நீர் கேள்விப்பட்டால் என்னிடம் வாரும்!” என்றார்கள். அதற்கேற்ப நான் என் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நாடு துறந்து) மதீனாவுக்குச் சென்றுவிட்டார்கள். நான் என் குடும்பத்தாரிடம் இருந்துகொண்டே செய்திகளைக் கேட்டு அறிந்துகொண்டிருந்தேன். அவர்கள் மதீனாவுக்குச் சென்றவுடன் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்தேன். ஒரு சமயம் யஸ்ரிப்(மதீனா)வாசிகளில் சிலர் என்னிடம் வந்தனர். அவர்களிடம் “மதீனாவிற்கு வந்துள்ள இந்த மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “மக்கள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர். (மக்காவில்) அவருடைய சமுதாயத்தார் அவரைக் கொன்றுவிடத் திட்டமிட்டனர். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று கூறினர்.

பின்னர் நான் மதீனாவுக்குச் சென்று நபியவர்களைச் சந்தித்தேன். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என்னை அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம், மக்காவில் என்னை வந்து சந்தித்தவர்தாமே!” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். பிறகு “அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்துள்ள, எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுவீராக. பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக்கொள்க. ஏனெனில், அது உதயமாகும்போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்.

பிறகு தொழுவீராக! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும்(நண்பகல் நேரம்)வரை தொழுவீராக! பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்க. ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது.

பிறகு நிழல் சாய்ந்துவிட்டால் தொழுவீராக. அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். அதை அஸ்ரு வரை தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும்வரை தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! உளூச் செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “உங்களில் ஒருவர் உளூச் செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (நீரோடு சேர்ந்து கீழே) விழுந்துவிடுகின்றன.

பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து நீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.

பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து நீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.

பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி(மஸ்ஹுச் செய்தி)டும்போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து நீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.

பிறகு அவர் தம் பாதங்களைக் கணுக்கால்கள்வரை கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து நீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன.

(அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) நபித்தோழர் அபூஉமாமா (ரலி) கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அம்ரு பின் அபஸா (ரலி) என்னிடம் கூறியபோது நான், “அம்ருப்னு அபஸா! என்ன சொல்கின்றீர்கள் என்பதை நன்கு யோசித்துச் சொல்லுங்கள்! ஒரே இடத்தில் (இத்தனையும்) அந்த மனிதர் வழங்கப்பெறுகிறாரா?” என்று கேட்டேன். அதற்கு அம்ரு பின் அபஸா (ரலி), “அபூஉமாமா!, என் வயது முதிர்ந்துவிட்டது; எனது எலும்பு நலிந்துவிட்டது; எனது தவணை நெருங்கி விட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் மீதோ அவன் தூதர் மீதோ பொய்யுரைப்பதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை. நான் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை (இவ்வாறு ஏழுவரை எண்ணிச் சொல்கிறார்) மட்டுமே செவியுற்றிருந்தால் இதை ஒருபோதும் நான் அறிவித்திருக்கமாட்டேன். ஆனால், அதைவிட அதிகத் தடவைகள் நான் செவியுற்றேன் (அதனால்தான் அறிவித்தேன்)” என்றார்கள்.

அறிவிப்பாளர்: அம்ரு பின் அபஸா அஸ்ஸலமீ (ரலி)

குறிப்பு: கூடுதல் விபரங்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தளத்தின் முஸ்லிம் அறிவகத்தில் 964ஆவது ஹதீஸைப் பார்வையிடவும். (https://muslim.satyamargam.com/5-32/964/)

Share this Hadith:

Leave a Comment