அத்தியாயம்: 7, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1453

و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ضَمْرَةَ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏كَتَبَ ‏ ‏الضَّحَّاكُ بْنُ قَيْسٍ ‏ ‏إِلَى ‏ ‏النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ‏ ‏يَسْأَلُهُ أَيَّ شَيْءٍ قَرَأَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْجُمُعَةِ سِوَى سُورَةِ ‏ ‏الْجُمُعَةِ ‏ ‏فَقَالَ كَانَ ‏ ‏يَقْرَأُ ‏ ‏هَلْ أَتَاكَ

ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்), நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களுக்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜும்ஆ நாளில் ‘அல்ஜும்ஆ’ (62ஆவது) அத்தியாயம் தவிர வேறு எந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்?’ என்று கேட்டுக் கடிதம் எழுதினார். அதற்கு, ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா’ எனும் (88ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள்” என நுஅமான் பின் பஷீர் (ரலி) பதில் எழுதினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment