و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ أَنَّهُ سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الْمَازِنِيَّ يَقُولُ
خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழை வேண்டி(த் தொழுகை நடத்தி)னார்கள். (திடலில்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்றபோது, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி)
குறிப்பு : ‘மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது’: வழக்கமாக மேல்துண்டை அணியும்போது, அதன் நடுப்பகுதி பிடறியில் இருக்கும்; இரு முனைகளும் மார்பில் புரளும். அதை மாற்றிப் போட்டால் நடுப்பகுதி கழுத்தில் இருக்கும்; இரு முனைகளும் முதுகில் புரளும்.