حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ عَنْ مُوسَى بْنِ أَبِي تَمِيمٍ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدِّينَارُ بِالدِّينَارِ لَا فَضْلَ بَيْنَهُمَا وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ لَا فَضْلَ بَيْنَهُمَا
و حَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ يَقُولُ حَدَّثَنِي مُوسَى بْنُ أَبِي تَمِيمٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ
“தங்க நாணயத்தைத் தங்க நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்; வெள்ளி நாணயத்தை வெள்ளி நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
நாணயத்தை நாணயத்திற்கு ‘விற்பது’ என்பதை, சில்லரையாக ‘மாற்றிக்கொள்வது’ எனப் பொருள் கொள்ள வேண்டும். 100 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து, 10 ரூபாய் நோட்டில் 10ஐப் பெற்றுக்கொள்வது என்பது, 100 ரூபாயை ‘விற்பது’ ஆகாது.
சில்லரை தட்டுப்பாடு ஏற்படும்போது சிலர், 100 ரூபாய்க்கு, சில்லரையாக 90 ரூபாய் மட்டும் கொடுப்பார்கள். இதுவே பணத்தைப் பணத்திற்கு விற்கும் வட்டியாகும்.