அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1137

‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏وَحَرْمَلَةُ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏أَخْبَرَهُ ‏

أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي ‏ ‏السُّبْحَةَ ‏ ‏بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏حَيْثُ تَوَجَّهَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவில் பயணம் செய்யும்போது தமது வாகனத்தின் முதுகிலமர்ந்தவாறு அது செல்லும் திசையில் நஃபில் தொழுகைகள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் : ஆமிர் பின் ரபீஆ (ரலி) வழியாக அவரின் மகன் அப்துல்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1136

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُسَبِّحُ ‏ ‏عَلَى ‏ ‏الرَّاحِلَةِ ‏ ‏قِبَلَ ‏ ‏أَيِّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لَا ‏ ‏يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் எந்தத் திசையை முன்னோக்கிப் பயணித்தாலும் அதில் இருந்தவாறு அவர்கள் நஃபில் தொழுகைகளைத் தொழுவார்கள். வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள். ஆனால், கடமையான (ஃபர்ளுத்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்.)

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அவரின் மகன் ஸாலிம் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1135

و حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏‏

أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُوتِرُ عَلَى رَاحِلَتِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1134

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ ‏


قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ ‏ ‏كَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يَفْعَلُ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகனத்தின் மீதமர்ந்து அது செல்லும் திசையில் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தொழுவார்கள்” என்று (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1133

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ يَسَارٍ ‏ ‏أَنَّهُ قَالَ :‏‏ 

‏كُنْتُ أَسِيرُ مَعَ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏بِطَرِيقِ ‏ ‏مَكَّةَ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ ثُمَّ أَدْرَكْتُهُ فَقَالَ لِي ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏أَيْنَ كُنْتَ فَقُلْتُ لَهُ خَشِيتُ الْفَجْرَ فَنَزَلْتُ فَأَوْتَرْتُ ‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُسْوَةٌ فَقُلْتُ بَلَى وَاللَّهِ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُوتِرُ عَلَى الْبَعِيرِ

நான் (ஓர் இரவில்) மக்கா செல்லும் சாலையில் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து நான் அஞ்சி, (எனது வாகனத்திலிருந்து) இறங்கி வித்ருத் தொழுதேன். பிறகு இப்னு உமர் (ரலி) அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டபோது, “(இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர்?” என்று அவர்கள் கேட்டார்கள். நான், “சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து அஞ்சினேன். எனவே (வாகனத்திலிருந்து) இறங்கி வித்ருத் தொழுதேன்” என்று கூறினேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்று இப்னு உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக (உள்ளது)!” என்றேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுதிருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் யஸார் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1132

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ :‏‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي عَلَى حِمَارٍ وَهُوَ مُوَجِّهٌ إِلَى ‏ ‏خَيْبَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கழுதையில் (பயணித்தவாறு) தொழுவதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கைபரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1131

و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏:‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي وَهُوَ مُقْبِلٌ مِنْ ‏ ‏مَكَّةَ ‏ ‏إِلَى ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏عَلَى رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ قَالَ وَفِيهِ نَزَلَتْ ‏‏فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ مُبَارَكٍ ‏ ‏وَابْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏ثُمَّ تَلَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ‏‏وَقَالَ فِي هَذَا نَزَلَتْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது பார்வை செல்லும் திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே, “… நீங்கள் எங்குத் திரும்பினாலும் அங்கிருப்பது அல்லாஹ்வின் திசையே!” எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) வழி அறிவிப்பில், “… இதை இப்னு உமர் (ரலி) அறிவித்த பிறகு ‘நீங்கள் எங்குத் திரும்பினாலும் அங்கிருப்பது அல்லாஹ்வின் திசையே!’ எனும் (2:115) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, இது தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1130

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏حَيْثُ تَوَجَّهَتْ بِهِ

நபி (ஸல்) தமது வாகனத்தில் அமர்ந்து, அது செல்லும் திசையை நோக்கி(நஃபிலான தொழுகைகளை)த் தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1129

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ :‏‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي ‏ ‏سُبْحَتَهُ ‏ ‏حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ نَاقَتُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தமது (ஒட்டகத்தின் மீதமர்ந்தவாறு) ஒட்டகம் செல்லும் திசையை நோக்கிக் கூடுதலான (நஃபில்) தொழுகை தொழுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 02, ஹதீஸ் எண்: 1128

و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْحَمِيدِ صَاحِبِ الزِّيَادِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُقَالَ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ :‏ ‏

إِذَا قُلْتَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏فَلَا تَقُلْ حَيَّ عَلَى الصَّلَاةِ قُلْ ‏ ‏صَلُّوا فِي بُيُوتِكُمْ قَالَ فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا ذَاكَ فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ ذَا قَدْ فَعَلَ ذَا مَنْ هُوَ خَيْرٌ مِنِّي إِنَّ الْجُمُعَةَ ‏ ‏عَزْمَةٌ ‏ ‏وَإِنِّي كَرِهْتُ أَنْ أُخْرِجَكُمْ فَتَمْشُوا فِي الطِّينِ ‏ ‏وَالدَّحْضِ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْحَمِيدِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ ‏ ‏قَالَ خَطَبَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏فِي يَوْمٍ ذِي رَدْغٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ الْجُمُعَةَ وَقَالَ قَدْ فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي ‏ ‏يَعْنِي النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏بِنَحْوِهِ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ هُوَ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏وَعَاصِمٌ الْأَحْوَلُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ ‏ ‏يَعْنِي النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ شُمَيْلٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْحَمِيدِ صَاحِبُ الزِّيَادِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏ ‏أَذَّنَ مُؤَذِّنُ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏يَوْمَ جُمُعَةٍ فِي يَوْمٍ مَطِيرٍ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏وَقَالَ وَكَرِهْتُ أَنْ تَمْشُوا فِي ‏ ‏الدَّحْضِ ‏ ‏وَالزَّلَلِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَمَرَ مُؤَذِّنَهُ فِي حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏فِي يَوْمِ جُمُعَةٍ فِي يَوْمٍ مَطِيرٍ بِنَحْوِ حَدِيثِهِمْ وَذَكَرَ فِي حَدِيثِ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي ‏ ‏يَعْنِي النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ إِسْحَقَ الْحَضْرَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏ ‏وُهَيْبٌ ‏ ‏لَمْ يَسْمَعْهُ مِنْهُ ‏ ‏قَالَ ‏ ‏أَمَرَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏مُؤَذِّنَهُ فِي يَوْمِ جُمُعَةٍ فِي يَوْمٍ مَطِيرٍ بِنَحْوِ حَدِيثِهِمْ

மழை பெய்துகொண்டிருந்த ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி), “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்… அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ் – தொழுகைக்கு வாருங்கள்’ என்று அழைக்காமல், ‘ஸல்லூ ஃபீ புயூத்திக்கும் – உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்’ என்று கூறுவீராக!” என்று முஅத்தினிடம் கூறினார்கள். அதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? ஜுமுஆ என்பது கட்டாயக் கடமைத் தொழுகைதான். (இருப்பினும்) நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை; என்னைவிடச் சிறந்த(நபிய)வர்களும் இவ்வாறுதான் செய்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)


குறிப்பு :

ஹம்மாதிப்னு ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “… சகதியுடைய ஒரு(மழை) நாளில் எங்களுக்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) உரையாற்றினார்கள்…” என்று ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் ஜுமுஆ பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. “என்னைவிடச் சிறந்தவர் – அதாவது நபி (ஸல்) – இவ்வாறு செய்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

ஆஸிம் (ரஹ்) வழி அறிவிப்பில், “… மழை பெய்த ஒரு வெள்ளிக்கிழமை அன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய முஅத்தின் பாங்கு சொன்னார் …” என்று அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. தொடர்ந்து, “… சேற்றிலும் சகதியிலும் நீங்கள் நடந்து வருவதை நான் விரும்பவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “…மழைபெய்த ஒரு வெள்ளிக்கிழமையில் இப்னு அப்பாஸ் (ரலி), தம் முஅத்தினிடம் …” என இடம்பெற்றுள்ளது. மேலும் “… என்னைவிடச் சிறந்தவர் – நபி (ஸல்) இவ்வாறு செய்துள்ளார்கள்” என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

அஹ்மதிப்னு இஸ்ஹாக் அல்ஹளரமீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… மழைபெய்த வெள்ளிக்கிழமை அன்று இப்னு இப்பாஸ் (ரலி), தம் முஅத்தினிடம் (அவ்வாறு அதான் சொற்களை மாற்றிக் கூறுமாறு) சொன்னார்கள்” என இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் இடம்பெறும் அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) என்பார், அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து (இதை நேரடியாகச்) செவியேற்கவில்லை என வுஹைப் (ரஹ்) கூறியுள்ளார்.