அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1853

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُنِي وَهُوَ صَائِمٌ وَأَيُّكُمْ يَمْلِكُ ‏ ‏إِرْبَهُ ‏ ‏كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمْلِكُ ‏ ‏إِرْبَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உங்களில் எவரால் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்?

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ருஸ்ஸித்தீக் (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1852

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏أَبَاكَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ فَسَكَتَ سَاعَةً ثُمَّ قَالَ نَعَمْ

“நபி (ஸல்) நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்’ என ஆயிஷா (ரலி) அறிவித்த ஹதீஸை உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் – ரஹ்) வாயிலாக செவியுற்றீரா?” என்று நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்)

அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1851

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقَبِّلُ إِحْدَى نِسَائِهِ وَهُوَ صَائِمٌ ثُمَّ تَضْحَكُ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பு நோற்றிருந்த நிலையில் தம் துணை வியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்” எனக் கூறிவிட்டு ஆயிஷா (ரலி) சிரிப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)