و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عَاصِمٍ عَنْ مُعَاذَةَ قَالَتْ :
سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ وَلَا تَقْضِي الصَّلَاةَ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قُلْتُ لَسْتُ بِحَرُورِيَّةٍ وَلَكِنِّي أَسْأَلُ قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக்கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “நீ ‘ஹரூரா’க்காரியா?” என்று கேட்டார்கள். “நான் ‘ஹரூரா’க்காரி அல்லள். ஆயினும், (தெரிந்து கொள்வதற்காகவே) கேட்கின்றேன்” என்றேன். அப்போது ஆயிஷா (ரலி), “எங்களுக்கும் (மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளை இடப்பட்டோம்; விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் கட்டளை இடப்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த்தி அப்தில்லாஹ் (ரஹ்)