அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 961

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي لَمْ ‏ ‏يَفِئْ ‏ ‏الْفَيْءُ ‏ ‏بَعْدُ ‏

و قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏لَمْ يَظْهَرْ ‏ ‏الْفَيْءُ ‏ ‏بَعْدُ

“சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்து கொண்டும் (சுவரில்) நிழல் விழாமலும் இருக்கும்போது நபி (ஸல்) அஸ்ரைத் தொழுவார்கள்”

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

அபூபக்ரு பின் அபூஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “… நிழல் இன்னும் தெரியாத நிலையிலும் …” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 960

أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا فَدَخَلَ عَلَيْهِ ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏فَأَخْبَرَهُ أَنَّ ‏ ‏الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ ‏ ‏أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا وَهُوَ ‏ ‏بِالْكُوفَةِ ‏

فَدَخَلَ عَلَيْهِ ‏ ‏أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ ‏ ‏فَقَالَ مَا هَذَا يَا ‏ ‏مُغِيرَةُ ‏ ‏أَلَيْسَ قَدْ عَلِمْتَ ‏ ‏أَنَّ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَالَ بِهَذَا أُمِرْتُ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِعُرْوَةَ ‏ ‏انْظُرْ مَا تُحَدِّثُ يَا ‏ ‏عُرْوَةُ ‏ ‏أَوَ إِنَّ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقْتَ الصَّلَاةِ ‏

فَقَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏كَذَلِكَ كَانَ ‏ ‏بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏وَلَقَدْ ‏ ‏حَدَّثَتْنِي ‏ ‏عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يُصَلِّ الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ ‏ ‏تَظْهَرَ

கூஃபா நகரின் ஆளுநராயிருந்த முஃகீரா பின் ஷுஅபா (ரஹ்) ஒருநாள் (அஸ்ருத்) தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அங்கு வந்த அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி), “ஏன் இவ்வாறு (தாமதப்படுத்தினீர்கள்) முஃகீரா? ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து தொழுவித்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். மீண்டும் ஜிப்ரீல் (அலை) தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். (ஐவேளைத் தொழுகையை முடித்த) பிறகு ஜிப்ரீல் (அலை) இவ்வாறே நான் (உங்களுக்குச் செய்து காட்டுமாறு) பணிக்கப்பட்டேன் என்று கூறியதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கவில்லையா என்ன? என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) வழியாக அவரின் மகன் பஷீர் (ரஹ்)

குறிப்பு :

ஒருநாள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) (அஸ்ருத்) தொழுகையைத் தாமதப் படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) வந்து மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), “உர்வாவே! நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதை நன்றாகக் கவனித்துச் சொல்லுங்கள். ஜிப்ரீல்(அலை) தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகை நேரத்தை (பிரித்து இனம்) காட்டினார்களா?” என்று உர்வா (ரஹ்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, “(ஆம்) அவ்வாறுதான் பஷீர் பின் அபீமஸ்உத் (ரஹ்) தம் தந்தை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்” என்றும் “எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அஸ்ருத் தொழுகையைத் தொழுவார்கள்” என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என்றும் உர்வா (ரஹ்) கூறியதாக இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 959

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ ‏ ‏عُرْوَةُ ‏ ‏أَمَا إِنَّ ‏ ‏جِبْرِيلَ ‏ ‏قَدْ نَزَلَ فَصَلَّى إِمَامَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏عُمَرُ ‏ ‏اعْلَمْ مَا تَقُولُ يَا ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا مَسْعُودٍ ‏ ‏يَقُولُا ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏نَزَلَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ

“ஜிப்ரீல் (ஒரு நாள்) இறங்கிவந்து, எனக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அவர்களுடன் நான் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன்” என்று சொல்லி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஐந்து (நேரத்) தொழுகைகளைத் தம் விரல்களால் எண்ணிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) வழியாக அவரின் மகன் பஷீர் (ரஹ்)

குறிப்பு :

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அஸ்ருத் தொழுகையை ( ஒருநாள்) சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), “ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக (நின்று) தொழுவித்தார்கள். (அப்போது அஸ்ருத் தொழுகையை இந்நேரத்துக்கு முந்தியே தொழுதார்கள்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), “உர்வா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உர்வா (ரஹ்), மேற்காணும் ஹதீஸைக் கூறினார்கள் என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸூஹ்ரீ குறிப்பிடுகிறார்.

ஐவேளைத் தொழுகைகள் கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவுக்கு மறுநாள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக இருந்து ஐவேளைகளின் உரிய நேரத்தில் தொழுகை நடத்திக் காட்டினார்கள்.