حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنِ ابْنِ قُسَيْطٍ حَدَّثَهُ أَنَّ عُرْوَةَ حَدَّثَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَتْهُ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنْ عِنْدِهَا لَيْلاً . قَالَتْ فَغِرْتُ عَلَيْهِ فَجَاءَ فَرَأَى مَا أَصْنَعُ فَقَالَ ” مَا لَكِ يَا عَائِشَةُ أَغِرْتِ ” . فَقُلْتُ وَمَا لِي لاَ يَغَارُ مِثْلِي عَلَى مِثْلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” أَقَدْ جَاءَكِ شَيْطَانُكِ ” . قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَوَمَعِيَ شَيْطَانٌ قَالَ ” نَعَمْ ” . قُلْتُ وَمَعَ كُلِّ إِنْسَانٍ قَالَ ” نَعَمْ ” . قُلْتُ وَمَعَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ” نَعَمْ وَلَكِنْ رَبِّي أَعَانَنِي عَلَيْهِ حَتَّى أَسْلَمَ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டு வெளியே சென்றார்கள். அவர்கள்மீது எனக்குப் பொறாமை(யால் சந்தேகம்) ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? பொறாமை கொண்டுவிட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) உங்களைப் போன்ற ஒருவர்மீது பொறாமை கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் ஷைத்தான் உன்னிடம் வந்துவிட்டானா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் இருக்கின்றானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) இருக்கின்றானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்” என்றார்கள். நான், “உங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். ஷைத்தான் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)