அத்தியாயம்: 54, பாடம்: 10, ஹதீஸ் எண்: 5132

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي أَبُو شُرَيْحٍ، أَنَّ عَبْدَ الْكَرِيمِ بْنَ الْحَارِثِ، حَدَّثَهُ أَنَّ الْمُسْتَوْرِدَ الْقُرَشِيَّ قَالَ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ تَقُومُ السَّاعَةُ وَالرُّومُ أَكْثَرُ النَّاسِ ‏”‏ ‏.‏ قَالَ فَبَلَغَ ذَلِكَ عَمْرَو بْنَ الْعَاصِ فَقَالَ مَا هَذِهِ الأَحَادِيثُ الَّتِي تُذْكَرُ عَنْكَ أَنَّكَ تَقُولُهَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ الْمُسْتَوْرِدُ قُلْتُ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَقَالَ عَمْرٌو لَئِنْ قُلْتَ ذَلِكَ إِنَّهُمْ لأَحْلَمُ النَّاسِ عِنْدَ فِتْنَةٍ وَأَجْبَرُ النَّاسِ عِنْدَ مُصِيبَةٍ وَخَيْرُ النَّاسِ لِمَسَاكِينِهِمْ وَضُعَفَائِهِمْ

முஸ்தவ்ரித் அல்குறஷீ (ரலி), “ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டேன்” என்று கூறினார்கள். இச்செய்தி அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக உங்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ்களின் நிலை என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு முஸ்தவ்ரித் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதைத்தான் கூறினேன்” என்றார்கள். அதற்கு அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), “நீர் அப்படிச் சொல்லியிருந்தால், அவர்கள் சோதனையின்போது மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்; சோதனையின்போது மக்களில் நன்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்பவர்கள்; தம்மிடையேயுள்ள ஏழைகளுக்கும் நலிந்தவர்களுக்கும் மக்களிலேயே நல்லுதவி புரியும் நல்லவர்கள் என்பதையும் (சேர்த்து) அறிந்துகொள்க” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) வழியாக அப்துல் கரீம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)

அத்தியாயம்: 54, பாடம்: 10, ஹதீஸ் எண்: 5131

حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ حَدَّثَنِي مُوسَى بْنُ عُلَىٍّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ الْمُسْتَوْرِدُ الْقُرَشِيُّ عِنْدَ عَمْرِو بْنِ الْعَاصِ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ تَقُومُ السَّاعَةُ وَالرُّومُ أَكْثَرُ النَّاسِ ‏”‏ ‏.‏ فَقَالَ لَهُ عَمْرٌو أَبْصِرْ مَا تَقُولُ ‏.‏ قَالَ أَقُولُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَئِنْ قُلْتَ ذَلِكَ إِنَّ فِيهِمْ لَخِصَالاً أَرْبَعًا إِنَّهُمْ لأَحْلَمُ النَّاسِ عِنْدَ فِتْنَةٍ وَأَسْرَعُهُمْ إِفَاقَةً بَعْدَ مُصِيبَةٍ وَأَوْشَكُهُمْ كَرَّةً بَعْدَ فَرَّةٍ وَخَيْرُهُمْ لِمِسْكِينٍ وَيَتِيمٍ وَضَعِيفٍ وَخَامِسَةٌ حَسَنَةٌ جَمِيلَةٌ وَأَمْنَعُهُمْ مِنْ ظُلْمِ الْمُلُوكِ ‏

முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் அல்குறஷீ (ரலி), அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுகமுடிவு ஏற்படும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். அப்போது அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), “நீர் சொல்வதை நன்றாகச் சிந்தித்துச் சொல்வீராக!” என்று கூறினார்கள். அதற்கு முஸ்தவ்ரித் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் சொல்கின்றேன்” என்றார்கள்.

அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), “நீர் இவ்வாறு கூறுவீராயின் அவர்களிடையே நான்கு குணங்கள் இருக்கும் (என்பதையும்) அறிந்துகொள்க:

  1. அவர்கள் சோதனையின்போது மக்களிலேயே மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பர்.
  2. சோதனைக்குப் பின்னர் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவர்.
  3. (களத்திலிருந்து) வெருண்டோடிய பின்னர் மிக விரைவாகத் திரும்பி வருபவர்கள்.
  4. ஏழைகள், அநாதைகள், நலிந்தோர் ஆகியோருக்கு நல்லுதவிகள் புரிபவர்கள். ஜந்தாவதாக அவர்களிடம் அழகிய குணம் ஒன்று உண்டு. ஆட்சியாளர்களின் அநீதியிலிருந்து (மக்களைக்) காப்பவர்கள்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) வழியாக உலைய்யு பின் ரபாஹ் (ரஹ்)