அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2275

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شَوَّالٍ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّهُ دَخَلَ عَلَى ‏ ‏أُمِّ حَبِيبَةَ ‏ ‏فَأَخْبَرَتْهُ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ بِهَا مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏بِلَيْلٍ

நான் (நபியவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) என்னை முஸ்தலிஃபாவிலிருந்து (மினாவிற்கு) இரவி(ன் இருளி)லேயே அனுப்பிவைத்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஹபீபா (ரலி) வழியாக ஸாலிம் பின் ஷவ்வால் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2274

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏مَوْلَى ‏ ‏أَسْمَاءَ ‏ ‏قَالَ: ‏ ‏

قَالَتْ لِي ‏ ‏أَسْمَاءُ ‏ ‏وَهِيَ عِنْدَ دَارِ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ لَا فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ يَا بُنَيَّ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ نَعَمْ قَالَتْ ارْحَلْ بِي فَارْتَحَلْنَا حَتَّى رَمَتْ ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏ثُمَّ صَلَّتْ فِي مَنْزِلِهَا فَقُلْتُ لَهَا ‏ ‏أَيْ ‏ ‏هَنْتَاهْ ‏ ‏لَقَدْ ‏ ‏غَلَّسْنَا ‏ ‏قَالَتْ كَلَّا ‏‏أَيْ بُنَيَّ إِنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَذِنَ ‏ ‏لِلظُّعُنِ ‏

و حَدَّثَنِيهِ ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي رِوَايَتِهِ قَالَتْ لَا أَيْ بُنَيَّ إِنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَذِنَ ‏ ‏لِظُعُنِهِ

அஸ்மா (ரலி) முஸ்தலிஃபாவில் தங்கியிருந்த இடத்தில் இருந்தபோது, என்னிடம் “சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அவர்கள் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நான் “ஆம் (மறைந்துவிட்டது)” என்றேன். “என்னுடன் (மினாவுக்குப்) புறப்படு” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். (மினா வந்ததும்) அவர்கள் ‘ஜம்ரா’வில் கல்லெறிந்துவிட்டுப் பின்னர் (திரும்பிவந்து) தமது கூடாரத்தில் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான், “அம்மா! நாம் விடிவதற்கு முன்பே (மினாவுக்கு) வந்து விட்டோம்” என்றேன். அவர்கள், “(இதில் தவறேதும்) இல்லை, மகனே! நபி (ஸல்) பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்து உள்ளார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி) வழியாக அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைஸான் (ரஹ்)


குறிப்பு :

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இல்லை, மகனே! அல்லாஹ்வின் நபி (ஸல்), (ஹஜ்) பயணத்திலிருந்த தம் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2273

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

وَدِدْتُ أَنِّي كُنْتُ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا اسْتَأْذَنَتْهُ ‏ ‏سَوْدَةُ ‏ ‏فَأُصَلِّي الصُّبْحَ ‏ ‏بِمِنًى ‏ ‏فَأَرْمِي ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏قَبْلَ أَنْ يَأْتِيَ النَّاسُ فَقِيلَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏فَكَانَتْ ‏ ‏سَوْدَةُ ‏ ‏اسْتَأْذَنَتْهُ قَالَتْ نَعَمْ إِنَّهَا كَانَتْ امْرَأَةً ثَقِيلَةً ‏ ‏ثَبِطَةً ‏ ‏فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَذِنَ لَهَا ‏

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

“ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று, நானும் அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்று, மினாவில் ஸுப்ஹுத் தொழுது விட்டு, மக்கள் வருவதற்கு முன்பே ‘ஜம்ரா’வில் கல்லெறிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பினேன்” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி), “ஆம். அவர் கனத்த உடலுடைய பெண்ணாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவருக்கு அனுமதியளித்தார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2272

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

كَانَتْ ‏ ‏سَوْدَةُ ‏ ‏امْرَأَةً ضَخْمَةً ‏ ‏ثَبِطَةً ‏ ‏فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏تُفِيضَ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏بِلَيْلٍ فَأَذِنَ لَهَا فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَلَيْتَنِي كُنْتُ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا اسْتَأْذَنَتْهُ ‏ ‏سَوْدَةُ ‏ ‏وَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏لَا ‏ ‏تُفِيضُ ‏ ‏إِلَّا مَعَ الْإِمَامِ

ஸவ்தா (ரலி) கனத்த உடலுடையவராகவும் மெதுவாக நடக்கும் பெண்ணாகவும் இருந்தார். எனவே, அவர் முஸ்தலிஃபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டுச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு அனுமதியளித்தார்கள்.

ஸவ்தா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று நானும் அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்!

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“ஆயிஷா (ரலி), இமாமுடனேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான காசிம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 49, ஹதீஸ் எண்: 2271

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَفْلَحُ يَعْنِي ابْنَ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ: ‏

اسْتَأْذَنَتْ ‏ ‏سَوْدَةُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْلَةَ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏تَدْفَعُ ‏ ‏قَبْلَهُ وَقَبْلَ ‏ ‏حَطْمَةِ النَّاسِ ‏ ‏وَكَانَتْ امْرَأَةً ثَبِطَةً ‏ ‏يَقُولُ ‏ ‏الْقَاسِمُ ‏ ‏وَالثَّبِطَةُ الثَّقِيلَةُ ‏ ‏قَالَ فَأَذِنَ لَهَا فَخَرَجَتْ قَبْلَ ‏ ‏دَفْعِهِ ‏ ‏وَحَبَسَنَا حَتَّى أَصْبَحْنَا ‏ ‏فَدَفَعْنَا ‏ ‏بِدَفْعِهِ ‏ ‏وَلَأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا اسْتَأْذَنَتْهُ ‏ ‏سَوْدَةُ ‏ ‏فَأَكُونَ ‏ ‏أَدْفَعُ ‏ ‏بِإِذْنِهِ أَحَبُّ إِلَيَّ مِنْ مَفْرُوحٍ بِهِ

முஸ்தலிஃபா இரவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கும் முன்பே (மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வதற்கு, ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். ஸவ்தா, கனத்த உடலுடையவராக (மெதுவாக நடப்பவராக) இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸவ்தா (ரலி) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்படுவதற்கு முன்பே (மினாவிற்குப்) புறப்பட்டுச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களை ஸுப்ஹுவரை அங்கேயே தங்கியிருக்கச் செய்தார்கள். பிறகு அவர்கள் (ஸுப்ஹுத் தொழுதுவிட்டுப்) புறப்படவே நாங்களும் புறப்பட்டோம்.

ஸவ்தா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று, முன்னதாகச் சென்றதைப் போன்று, நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் உவப்பானதாய் இருந்திருக்கும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸபிதா’ எனும் சொல்லுக்கு, கனத்த உடலுடையவர் என்று பொருள்” என்பதாக இதன் அறிவிப்பாளரான காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு அஸ்ஸித்தீக் (ரஹ்) கூறுகின்றார்.