حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا جَمِيعًا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَالْمُخَابَرَةِ وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ وَلَا يُبَاعُ إِلَّا بِالدِّينَارِ وَالدِّرْهَمِ إِلَّا الْعَرَايَا
و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ وَأَبِي الزُّبَيْرِ أَنَّهُمَا سَمِعَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُا نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ بِمِثْلِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’ மற்றும் ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், மரத்திலுள்ள செங்காய்களை விற்பதையும் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள) செங்கனிகளை தீனாருக்கும் திர்ஹத்திற்கும் விற்கலாம்; வேறு வகை விற்பனைக்கு அனுமதியில்லை – ‘அராயா’வில் தவிர (என்றும் உத்தரவிட்டார்கள்).
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்புகள் :
முஹாகலா = அறுவடை செய்த தானியத்திற்கு பதிலாக, கதிரில் உள்ள தானியத்தை விற்பது.
முஸாபனா = பேரீச்ச மரத்தில் உள்ள செங்கனிகளை, மரத்திலிருந்து பறிக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சங்கனிகளுக்குப் பதிலாக விற்பது/பண்டமாற்றிக் கொள்வது
முகாபரா = விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயிடம் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தை குத்தகைக்கு விடுவது.
அராயா = ஹதீஸ் 2835இன் அடிக்குறிப்பில் காண்க.