و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْعَالِيَةِ حَدَّثَنَا ابْنُ عَمِّ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنُ عَبَّاسٍ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِ السَّلَام رَجُلٌ آدَمُ طُوَالٌ جَعْدٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ عِيسَى ابْنَ مَرْيَمَ مَرْبُوعَ الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ سَبِطَ الرَّأْسِ وَأُرِيَ مَالِكًا خَازِنَ النَّارِ وَالدَّجَّالَ فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ
فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ
قَالَ كَانَ قَتَادَةُ يُفَسِّرُهَا أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ لَقِيَ مُوسَى عَلَيْهِ السَّلَام
“நான் (விண்ணேற்றப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் இம்ரானின் மகன் மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள் ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள் முடியுடையவர்கள். (அப்பயணத்தில்) மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும் சிவப்பு-வெண்மை கலவையான சருமம் கொண்டவர்களாகவும் படிந்து தொங்கும் தலைமுடியுடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான மாலிக்கும் தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். அவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை” என்பதோடு, “நீங்கள் அவரைச் சந்தித்ததில் ஐயம் கொள்ள வேண்டாம்” (32:23) என்ற இறைவசனத்தை மேற்கோள் காட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)
குறிப்பு :
மேற்கண்ட (32:23 ஆவது) வசனத்திற்கு, “நபி (ஸல்) மூஸா (அலை) அவர்களை (விண்ணேற்றத்தின்போது) சந்தித்ததைப் பற்றி நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம்” என்று கத்தாதா (ரஹ்) விளக்கமளித்தார்.