حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَسُرَيْجُ بْنُ يُونُسَ قَالَا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِي الْعَالِيَةِ عَنْ ابْنِ عَبَّاسٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِوَادِي الْأَزْرَقِ فَقَالَ أَيُّ وَادٍ هَذَا فَقَالُوا هَذَا وَادِي الْأَزْرَقِ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام هَابِطًا مِنْ الثَّنِيَّةِ وَلَهُ جُؤَارٌ إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ ثُمَّ أَتَى عَلَى ثَنِيَّةِ هَرْشَى فَقَالَ أَيُّ ثَنِيَّةٍ هَذِهِ قَالُوا ثَنِيَّةُ هَرْشَى قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى يُونُسَ بْنِ مَتَّى عَلَيْهِ السَّلَام عَلَى نَاقَةٍ حَمْرَاءَ جَعْدَةٍ عَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ خِطَامُ نَاقَتِهِ خُلْبَةٌ وَهُوَ يُلَبِّي
قَالَ ابْنُ حَنْبَلٍ فِي حَدِيثِهِ قَالَ هُشَيْمٌ يَعْنِي لِيفًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு பயணத்தில்) ‘அல்-அஸ்ரக்’ பள்ளத்தாக்கைக் கடந்து சென்றபோது, “இது எந்தப் பள்ளத்தாக்கு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்-அஸ்ரக் பள்ளத்தாக்கு” என்று பதிலளித்தார்கள். “மூஸா (அலை) உரத்த குரலில் தல்பியா சொல்லிக் கொண்டு இந்த மலைக் குன்றிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். பிறகு ஹர்ஷா மலைக் குன்றின் பக்கம் சென்றபோது, “இது எந்த மலைக் குன்று?” என்று கேட்டார்கள். மக்கள், “(இது) ஹர்ஷா மலைக் குன்று” என்று பதிலளித்தனர். “யூனுஸ் பின் மத்தா (அலை) நீண்ட கம்பளி அங்கியை அணிந்தவர்களாக, ஒரு திடமான சிவப்பு ஒட்டகத்திலமர்ந்து தல்பியா சொல்லிக் கொண்டிருந்ததை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நாரினாலானது” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)