حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ مُجَاهِدٍ قَالَ كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ
فَذَكَرُوا الدَّجَّالَ فَقَالَ إِنَّهُ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ قَالَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ أَسْمَعْهُ قَالَ ذَاكَ وَلَكِنَّهُ قَالَ أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ وَأَمَّا مُوسَى فَرَجُلٌ آدَمُ جَعْدٌ عَلَى جَمَلٍ أَحْمَرَ مَخْطُومٍ بِخُلْبَةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذَا انْحَدَرَ فِي الْوَادِي يُلَبِّي
நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோடு இருந்தபோது தஜ்ஜாலைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், “அவனுடைய இரு கண்களுக்குமிடையே ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்” என்று சொன்னார். அப்போது, “நான் அவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், ‘இப்ராஹீம் (அலை) அவர்களது உருவ அமைப்பை அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை(என்னை)ப் பாருங்கள். மூஸா (அலை) மாநிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணிப்பார்கள். அவர்கள் தல்பியா கூறியபடி இந்த (அல்-அஸ்ரக்) பள்ளத்தாக்கில் இறங்கியதை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்).