அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 242

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَالْمَدِينَةِ ‏ ‏فَمَرَرْنَا بِوَادٍ فَقَالَ ‏ ‏أَيُّ وَادٍ هَذَا فَقَالُوا ‏ ‏وَادِي الْأَزْرَقِ ‏ ‏فَقَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ مِنْ لَوْنِهِ وَشَعَرِهِ شَيْئًا لَمْ يَحْفَظْهُ ‏ ‏دَاوُدُ ‏ ‏وَاضِعًا إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ لَهُ ‏ ‏جُؤَارٌ ‏ ‏إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ مَارًّا بِهَذَا الْوَادِي قَالَ ثُمَّ سِرْنَا حَتَّى أَتَيْنَا عَلَى ثَنِيَّةٍ فَقَالَ أَيُّ ثَنِيَّةٍ هَذِهِ قَالُوا ‏ ‏هَرْشَى ‏ ‏أَوْ ‏ ‏لِفْتٌ ‏ ‏فَقَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى ‏ ‏يُونُسَ ‏ ‏عَلَى نَاقَةٍ حَمْرَاءَ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ ‏ ‏خِطَامُ ‏ ‏نَاقَتِهِ لِيفٌ ‏ ‏خُلْبَةٌ ‏ ‏مَارًّا بِهَذَا الْوَادِي مُلَبِّيًا ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது எந்தப் பள்ளத்தாக்கு?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்-அஸ்ரக் பள்ளத்தாக்கு” என்று பதிலளித்தனர். அப்போது அவர்கள், “மூஸா (அலை) அவர்கள் தம் இரு விரல்களைக் காதுகளுக்குள் நுழைத்தவர்களாக உரத்த குரலில் தல்பியாச் சொன்னபடி இந்தப் பள்ளத்தாக்கைக் கடந்து சென்று கொண்டிருந்ததை (மிஃராஜின் இரவுப் பயணத்தில்) நான் கண்டது (இப்போது) போன்று உள்ளது” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் பயணம் செய்து ஒரு மலைக் குன்றுக்கு வந்து சேந்தோம். அப்போது “இது எந்த மலைக் குன்று?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். மக்கள், ‘ஹர்ஷா’ அல்லது ‘லிஃப்த்’ என்று பதிலளித்தனர். அப்போது, “யூனுஸ் (அலை) அவர்கள் நீண்ட கம்பளி அங்கியை அணிந்தவர்களாக, ஈச்சநாரால் கடிவாளம் இடப்பட்ட ஒரு சிவப்பு ஒட்டகத்திலமர்ந்து தல்பியா சொன்னவாறு இந்த (மலைக் குன்றின்) பள்ளத்தாக்கைக் கடந்து சென்றதை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

மூஸா (அலை) அவர்களைப் பற்றிக் கூறும்போது அவர்களது நிறத்தைப் பற்றியும் முடியைப் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதோ குறிப்பிட்டார்கள். ஆனால் அது அறிவிபாளர் தாவூத் (ரஹ்) அவர்களின் நினைவிலில்லை.

Share this Hadith:

Leave a Comment