و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ وَتَقَارَبَا فِي اللَّفْظِ قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ عَبْدٌ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أُسْرِيَ بِي لَقِيتُ مُوسَى عَلَيْهِ السَّلَام فَنَعَتَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا رَجُلٌ حَسِبْتُهُ قَالَ مُضْطَرِبٌ رَجِلُ الرَّأْسِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ قَالَ وَلَقِيتُ عِيسَى فَنَعَتَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا رَبْعَةٌ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ يَعْنِي حَمَّامًا قَالَ وَرَأَيْتُ إِبْرَاهِيمَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ وَأَنَا أَشْبَهُ وَلَدِهِ بِهِ قَالَ فَأُتِيتُ بِإِنَاءَيْنِ فِي أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الْآخَرِ خَمْرٌ فَقِيلَ لِي خُذْ أَيَّهُمَا شِئْتَ فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقَالَ هُدِيتَ الْفِطْرَةَ أَوْ أَصَبْتَ الْفِطْرَةَ أَمَّا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ
நபி (ஸல்), (விண்ணுலக) இரவுப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது நடந்தவற்றை விவரித்து, “நான் மூஸா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறி அவர்களை வர்ணித்தபோது, “மூஸா (அலை) ‘ஷனூஆ’ குலத்து ஆண்களைப் போன்று ஒல்லியாக, தொங்கும் தலைமுடியோடு காணப்பட்டார்கள்”.
“நான் ஈஸா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர்களை வர்ணித்தபோது, “சிவந்த நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் கொண்டவர்களாக, (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்று இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தேன். அவர்களுடைய வழித்தோன்றல்களிலேயே சாயலில் அவர்களை ஒத்திருப்பவன் நானே. (அந்தப் பயணத்தில்) என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்துப் பருகினேன். அப்போது, நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டு விட்டீர்கள் அல்லது நீங்கள் இயற்கை மரபை பெற்றுக் கொண்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும் என்று என்னிடம் சொல்லப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)